7th Standard Tamil Book 1st Term Solution 2022
On this page, we are going to see the 7th Standard Tamil Book 1st Term Solution. You can find the answers to your doubts about the 7th standard Tamil questions here.
We have given a solution for 7th Std Tamil Book Back all one mark questions. And also we have given some extra objective type Tamil questions for school students.
End of the page we have attached also 7th Std Model questions for TNPSC, TET, and Police Exam aspirants.
7th Standard Tamil Books 2022
Text Book Links | Term 1 | Term 2 | Term-3 |
இயல் 1: அமுதத் தமிழ்
1.1. எங்கள் தமிழ்
I. சொல்லும் பொருளும்
- ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
- குறி – குறிக்கோள்
- விரதம் – நோன்பு
- பொழிகிற – தருகின்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் _________.
- வழி
- குறிக்கோள்
- கொள்கை
- அறம்
2. ‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
- குரல் + யாகும்
- குரல் + ஆகும்
- குர + லாகும்
- குர + ஆகும்
3. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
- வான்ஒலி
- வானொலி
- வாவொலி
- வானெலி
III. நயம் அறிக
1. ‘எங்கள் தமிழ்’ பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
- அருள்நெறி – அதுவே
- கொல்லா – கொள்கை
- எல்லா – என்றும்
- அன்பும் – அச்சம்,
- இன்புறவே – இசைந்திடும்
2. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
- அருள் – பொருள்
- தரலாகும் – குரலாகும்
- புகழாது – இகழாது
- யாரையும் – தாரையும்
- இன்புறவே – அன்பறமே
- அன்பும் – இன்பம்
3. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
- தரலாகும் – குரலாகும்
- ஊக்கிவிடும் – போக்கிவிடும்
- வானொலியாம் – தேன்மொழியாம்
- புகழாது – இகழாது
1.2. ஒன்றல்ல இரண்டல்ல
I. சொல்லும் பொருளும்
- ஒப்புமை – இணை
- முகில் – மேகம்
- அற்புதம் – விந்தை
- உபகாரி – வள்ளல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________.
- கலம்பகம்
- பரிபாடல்
- பரணி
- அந்தாதி
2. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
- அகில்
- முகில்
- துகில்
- துயில்
3. ‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
- இரண்டு + டல்ல
- இரண் + அல்ல
- இரண்டு + இல்ல
- இரண்டு + அல்ல
4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
- தந்து + உதவும்
- தா + உதவும்
- தந்து + தவும்
- தந்த + உதவும்
5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- ஒப்புமைஇல்லாத
- ஒப்பில்லாத
- ஒப்புமையில்லாத
- ஒப்புஇல
1.3. பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மொழியின் முதல் நிலை பேசுதல், ________ ஆகியனவாகும்.
- படித்தல்
- கேட்டல்
- எழுதுதல்
- வரைதல்
2. ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.
- பேச்சு
- எழுத்து
- குரல்
- பாட்ட
3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று _________
- உருது
- இந்தி
- தெலுங்கு
- ஆங்கிலம்
4. பேச்சுமொழியை ________ வழக்கு என்றும் கூறுவர்
- இலக்கிய
- உலக
- நூல்
- மொழி
II. சரியா தவறா என எழுதுக.
- மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது. (சரி)
- எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது. (சரி)
- பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி. (தவறு)
- எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம். (தவறு)
- பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம். (சரி)
III. ஊடகங்களை வகைப்படுத்துக.
வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்
எழுத்துமொழி
மின்னஞ்சல், செய்தித்தாள், நூல்கள்
பேச்சுமொழி
வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்
1.5. குறறியலுகரம், குறறியலி்கரம்
I. கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்த
- நெடில்தொடர் : ஆறு, காசு, ஏடு
- ஆய்தத்தொடர் : எஃகு
- உயிர்த்தொடர் : விறகு
- வன்தொடர் : உழக்கு, எட்டு
- மென்தொடர் : பந்து, கரும்பு
- இடைத்தொடர் : கொய்து
II. பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.
- பசு, விடு, ஆறு, கரு = கரு
- பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து = பஞ்சு
- ஆறு, மாசு, பாகு, அது = அது
- அரசு, எய்து, மூழ்கு, மார்பு = அரசு
- பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு = எஃகு
III. கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொடரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக.
கோதை கவிதையைப் படித்தாள்
வினா | அழுத்தம் தர வேண்டிய சொல் |
கோதை எதைப் படித்தாள்? | எதைப் |
கவிதையைப் படித்தது யார்? | யார் |
கோதை கவிதையை என்ன செய்தாள்? | என்ன |
IV. படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக
உயர்திணை – ஆண்பால் அஃறிணை – ஒன்றன்பால் உயர்திணை – பெண்பால்
V. கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.
வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்
உயர்திணை | அஃறிணை |
முகிலன், கயல்விழி, தலைவி, ஆசிரியர், சுரதா | வயல், குதிரை, கடல், புத்தகம், மரம் |
தொகைச் சொற்களை விரித்து எழுதுக.
- இருதிணை : உயர்திணை, அஃறிணை
- முக்கனி : மா, பலா, வாழை
- முத்தமிழ் : இயல், இசை, நாடகம்
- நாற்றிசை : கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
- ஐவகைநிலம் : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
- அறுசுவை : இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு
VI. கட்டங்களிலுள்ள எழுத்துகளை மாற்றி, மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக.
ம | த | கு |
த | ந் | தி |
கு | தி | ரை |
VII. இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.
(எ.கா.) அரசுக்குத் தவறாமல் வரி செலுத்த வேண் டும்.
ஏட்டில் எழுதுவது வரி வடிவம்.
1. மழலை பேசும் மொழி அழகு.
இனிமைத் தமிழ் மொழி எமது.
2. அன்னை தந்தையின் கைப் பிடித்துக் குழந்தை நடை பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி வழக்கு.
3. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்
எழுத்துகள் தொடர்ந் து நின்று பொருள் தருவது சொல்
4. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் செல்வர் .
குழந்தையை மெதுவாக நட என்போம்.
5. நீதி மன்றத்தில் கொடுப்பது வழக்கு.
‘நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு வழக்கு
VIII. கலைச்சொல் அறிவோம்.
- ஊடகம் – Media
- பருவ இதழ் – Magazine
- மொழியியல் – Linguistics
- பொம்மலாட்டம் – Puppetry
- ஒலியியல் – Phonology
- எழுத்திலக்கணம் – Orthography
- இதழியல் – Journalism
- உரையாடல் – Dialogue
இயல் 2: அணில் நிழல்காடு
2.1. காடு
I. சொல்லும் பொருளும்
- ஈனறு – பெற்று
- களித்திட – மகிழ்ந்திட
- கொம்பு – கிளை
- நச்சரவம் – விடமுள்ள பாம்பு
- அதிமதுரம் – மிகுந்த சுவை
- விடுதி – தங்கும் இடம்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வாழை, கன்றை ________.
- ஈன்றது
- வழங்கியது
- கொடுத்தது
- தந்தது
2. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
- காடு + டெல்லாம்
- காடு + எல்லாம்
- கா + டெல்லாம்
- கான் + எல்லாம்
3. ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.
- கிழங்குஎடுக்கும்
- கிழங்கெடுக்கும்
- கிழங்குடுக்கும்
- கிழங்கொடுக்கும்
2.2. அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
I. சொல்லும் பொருளும்
- பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு
- துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____.
- பச்சை இலை
- கோலிக்குண்டு
- பச்சைக்காய்
- செங்காய்
2. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை _____.
- ஒட்டிய பழங்கள்
- சூடான பழங்கள்
- வேகவைத்த பழங்கள்
சுடப்பட்ட பழங்கள்
3. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- பெயர + றியா
- பெயர் + ரறியா
- பெயர் + அறியா
- பெயர + அறியா
4. ‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- மன + மில்லை
- மனமி + இல்லை
- மனம் + மில்லை
- மனம் + இல்லை
5. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- நேற்றுஇரவு
- நேற்றிரவு
- நேற்றுரவு
- நேற்இரவு
2.3. விலங்குகள் உலகம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ____.
- காது
- தந்தம்
- கண்
- கால்நகம்
2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _______.
- வேடந்தாங்கல்
- கோடியக்கரை
- முண்டந்துறை
- கூந்தன்குளம்
3. ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
- காடு + ஆறு
- காட்டு + ஆறு
- காட் + ஆறு
- காட் + டாறு
4. ‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- அனைத்து + துண்ணி
- அனை + உண்ணி
- அனைத் + துண்ணி
- அனைத்து + உண்ணி
5. ‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
- நேரமாகி
- நேராகி
- நேரம்ஆகி
- நேர்ஆகி
6. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
- வேட்டைஆடிய
- வேட்டையாடிய
- வேட்டாடிய
- வேடாடிய
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ – என்று அழைக்கப்படும் விலங்கு புலி.
2. யானைக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும்.
3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் உடலைப் போர்த்தியிருக்கும் அடர்ந்த முடிகள்
2.5. நால்வகைக் குறுக்கங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ______.
- அரை
- ஒன்று
- ஒன்றரை
- இரண்டு
2. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ________.
- போன்ம்
- மருண்ம்
- பழம் விழுந்தது
- பணம் கிடைத்தது
3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _______.
- ஐகாரக் குறுக்கம்
- ஔகாரக் குறுக்கம்
- மகரக் குறுக்கம்
- ஆய்தக் குறுக்கம
II. எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.
- மகளிர் X ஆடவர்
- அரசன் X அரசி
- பெண் X ஆண்
- மாணவன் X மாணவி
- சிறுவன் X சிறுமி
- தோழி X தோழன்
III. படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுக.
ஒன்றன்பால் ஆண்பால் ஒன்றன்பால்
பெண்பால் பலர்பால் பலவின்பால்
IV. பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.
(எ.கா.) கண்ணகி சிலம்பு அணிந்தான்.
கண்ணகி சிலம்பு அணிந்தாள்.
1. கோவலன் சிலம்பு விற்கப் போனாள்.
கோவலன் சிலம்பு விற்கப் போனான்
2. அரசர்கள் நல்லாட்சி செய்தார்.
அரசர்கள் நல்லாட்சி செய்தனர்.
3. பசு கன்றை ஈன்றன.
பசு கன்றை ஈன்றது.
4. மேகங்கள் சூழ்ந்து கொண்டது.
மேகங்கள் சூழ்ந்து கொண்டன.
5. குழலி நடனம் ஆடியது.
குழலி நடனம் ஆடினார்
V. வட்டத்திலுள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை அமைக்க.
கல், புதையல், இலை, கடலை, கடல், கதை, புல், இயல், தையல், கலை, இல்லை,
VI. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.
வாழை | தயிர் | கூடு | திடல் | பாட்டு |
குருவி | கொய்யா | சோறு | பழம் | பறவை |
விளையாட்டு | கூட்டம் | அவரை | போட்டி | காய |
- வாழை + காய் = வாழைக்காய்
- வாழை + பழம் = வாழைப்பழம்
- குருவி + கூடு = குருவிக்கூடு
- குருவி + கூட்டம் = குருவிக்கூட்டம்
- விளையாட்டு + திடல்= விளையாட்டுத்திடல்
- விளையாட்டு + போட்டி = விளையாட்டுப்போட்டி
- தயிர் + கூடு = தயிரக்கூடு
- தயிர் + சோறு = தயிர்ச்சோறு
- கொய்யா + காய் = கொய்யாக்காய்
- கொய்யா + பழம் = கொய்யாப்பழம்
- அவரை +காய் = அவரைக்காய்
- பாட்டு + போட்டி = பாட்டுப்போட்டி
- பறவை + கூடு = பறைவக்கூடு
- பறவை + கூட்டம் = பறவைக்கூட்டம்
VII. விடுகதைகளுக்கு விடை எழுதுக.
1. மரம் விட்டு மரம் தாவுவேன்; குரங்கு அல்ல. வளைந்த வாலுண்டு; புலி அல்ல. கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல. முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?
அணில்
2. என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது. முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன். இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன். மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்?
குதிரை
3. வெள்ளையாய் இருப்பேன்; பால் அல்ல. மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?
கொக்கு
VIII. கலைச்சொல் அறிவோம்.
- தீவு – Island
- உவமை – Parable
- இயற்கை வளம் – Natural Resource
- காடு – Jungle
- வன விலங்குகள் – Wild Animals
- வனவியல் – Forestry
- வனப் பாதுகாவலர் – Forest Conservator
- பல்லுயிர் மண்டலம் – Bio Diversity
2.6. திருக்குறள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வாய்மை எனப்படுவது __________________
- அன்பாகப் பேசுதல்
- தீங்குதராத சொற்களைப் பேசுதல்
- தமிழ்ல் பேசுதல்
- சத்தமா பேசுதல்
2. செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும் __________________
- மன்னன்
- பொறாமை இல்லாதவன்
- பொறாமை உள்ளவன்
- செல்வந்தன்
3. பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________
- பொரு + செல்வம்
- பொருட் + செல்வம்
- பொருள் + செல்வம்
- பொரும் + செல்வம்
4. யாதனில் என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது __________________
- யா + எனில்
- யாது + தெனில்
- யா + தெனில்
- யாது + எனில்
5. தன் + நெஞ்சம் என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது __________________
- தன்நெஞ்சு
- தன்னெஞ்சு
- தானெஞ்சு
- தனெஞ்சு
6. தீது + உண்டோ என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது __________________
- தீதுண்டோ
- தீதுஉண்டோ
- தீதிண்டோ
- தீயுண்டோ
II. சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்தி எழுதுக.
அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்.
ஈ) பொருள்களைச் சேர்த்தல்.
விடை
அ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
ஆ) பொருள்களைச் சேர்த்தல்.
இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்.
ஈ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
III. கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க.
பொருட்செல்வம் | எல்லாம் | பூரியார் | செல்வத்துள் |
கண்ணும் | அருட்செல்வம் | உள | செவிச்செல்வம் |
அச்செல்வம் | தலை | செல்வம் |
1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
இயல் 3: நாடு அதை நாடு
3.1. புலி தங்கிய குகை
I. சொல்லும் பொருளும்
- சிற்றில் – சிறு வீடு
- யாண்டு – எங்கே
- கல் அளை – கற்குகை
- ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ‘யாண்டு’ என்னும் சொல்லின் பொருள் __________________
- எனது
- எங்கு
- எவ்வளவு
- எது
2. ‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது __________________
- யாண்டு + உளனோ?
- யாண் + உளனோ?
- யா + உளனோ?
- யாண்டு + உனோ?
3. ‘கல் + அளை என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது __________________
- கல்லளை
- கல்அளை
- கலலளை
- கல்லுளை
3.2. பாஞ்சை வளம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஊர்வலத்தின் முன்னால் _____ அசைந்து வந்தது.
- தோரணம்
- வானரம்
- வாரணம்
- சந்தனம்
2. பாஞ்சாலங்குறிச்சியில் _____ நாயை விரட்டிடும்,
- முயல்
- நரி
- பரி
- புலி
3. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது _____.
- மெத்தை விரிக்கப்பட்ட வீடு
- படுக்கையறை உள்ள வீடு
- மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
- மாடி வீடு
4. ‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- பூட்டு + கதவுகள்
- பூட்டும் + கதவுகள்
- பூட்டின் + கதவுகள்
- பூட்டிய + கதவுகள்
5. ‘தோணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- தோரணம் + மேடை
- தோரண + மேடை
- தோரணம் + ஒடை
- தோரணம் + ஓடை
6. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- வாசல்அலங்காரம்
- வாசலங்காரம்
- வாசலலங்காரம்
- வாசலிங்காரம்
II. பொருத்துக.
- பொக்கிஷம் – அழகு
- சாஸ்தி – செல்வம்
- விஸ்தாரம் – மிகுதி
- சிங்காரம் – பெரும் பரப்பு
விடை : 1-அ, 2 – இ, 3 – ஈ, 4 – அ
3.3 தேசியம் காத்த செம்மல் (பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்)
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ______.
- தூத்துக்குடி
- காரைக்குடி
- சாயல்குடி
- மன்னார்குடி
2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் _____.
- இராஜாஜி
- நேதாஜி
- காந்திஜி
- நேருஜி
3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப்
பாராட்டியவர் _____.
- இராஜாஜி
- பெரியார்
- திரு.வி.க
- நேதாஜி
3.5. வழக்கு
I. பொருத்துக.
- பந்தர் – முதற்போலி
- மைஞ்சு – முற்றுப்போலி
- அஞ்சு – இடைப்போலி
- அரையர் – கடைப்போலி
விடை – 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
II. பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.
- வீரர்கள் நாட்டைக் காத்தனர்.
- பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
- கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.
- திருக்குறளை எழுதியவர் யார்?
- கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.
எழுவாய் | பயனிலை | செயப்படுபொருள் |
வீரர்கள் | நாட்டைக் | காத்தனர் |
பொதுமக்கள் | அந்நியத்துணிகளைத் | தீயிட்டு எரித்தனர் |
கொற்கைத் துறைமுகத்திலே | பாண்டியனுடைய மீனக்கொடி | பறந்தது |
திருக்குறளை | எழுதியவர் | யார்? |
கபிலர் | குறிஞ்சிப்பாட்டை | எழுதிய புலவர் |
III. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.
- கம்பர் இராமாயணத்தை எழுதினார்
- ராமு கவிதை எழுதினான்
- கீதா ஓவியம் வரைந்தாள்
- ஒளவையார் ஆத்திசூடி இயற்றினார்
- வீரர்கள் நாட்டைக் காத்தனர்
IV. இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக.
(எ.கா.) வீடு சென்றான் – வீடு+கு+சென்றான் – வீட்டுக்குச் சென்றான்
- மாடு புல் கொடுத்தார் – மாடுக்குப் புல் கொடுத்தார்
- பாட்டு பொருள் எழுது – பாட்டுக்குப் பொருள் எழுது
- செடி பாய்ந்த நீர் – செடிக்குப் பாய்ந்த நீர்
- முல்லை தேர் தந்தான் பாரி – முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
- சுவர் சாந்து பூசினாள் – சுவர்க்குச் சாந்து பூசினாள்
V. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
கண் | அழகு | கண்ணழகு | கண்ணுண்டு |
மண் | மண்ணழகு | மண்ணுண்டு | |
விண் | உண்டு | விண்ணழகு | விண்ணுண்டு |
பண் | பண்ணழழு | பண்ணுண்டு |
VI. அகம் என முடியும் சொற்களை எழுதுக.
(எ.கா.) நூலகம்
மருந்தகம், தலைமையகம், எழிலகம், அலுவலகம், செயலகம்
VII. கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக.
(எ.கா.) திருக்குறள் ௩ (3) பால்களைக் கொண்டது.
- எனது வயது க௩ (13)
- நான் படிக்கும் வகுப்பு எ (7)
- தமிழ் இலக்கணம் ரு (5) வகைப்படும்.
- திருக்குறளில் க௩௩ (133) அதிகாரங்கள் உள்ளன.
- இந்தியா க௯௪எ (1947) ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.
VIII. குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.
- மூதறிஞர் இராஜாஜி
- வீரமங்கை வேலுநாச்சியார்
- பாஞ்சாலங்குறிச்சி வீரன் கட்டபொம்மன்
- வெள்ளையரை எதிர்த்த தீரன் சின்னமலை
- கொடிகாத்தவர் திருப்பூர் குமரன்
- எளிமையின் இலக்கணம் கக்கன்
- தில்லையாடியின் பெருமை வள்ளியம்மை
- கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார்
- பாட்டுக்கொரு புலவன் பாரதியார்
- விருதுப்பட்டி வீரர் காமராஜர்
- கள்ளுக்கடை மறியல் பெண்மணி நாகம்மை
- மணியாட்சியின் தியாகி வாஞ்சிநாதன்
IX. கலைச்சொல் அறிவோம்.
- கதைப்பாடல் – Ballad
- பேச்சாற்றல் – Elocution
- துணிவு – Courage
- ஒற்றுமை – Unity
- தியாகம் – Sacrifice
- முழக்கம் – Slogan
- அரசியல் மேதை – Political Genius
- சமத்துவம் – Equality
Some Important Links
Pechi moli ____ valaku
Ulaga Vazhakku – உலக வழக்கு