9th Standard 3rd Term Tamil Book Back Solution 2022 & 9th Tamil Guide

9th Standard Tamil Book 3rd Term Answers 2022

9th Standard Tamil Book Back Answers

வாழிய நிலனே

சொல்லும் பொருளும்:

  • தெங்கு – தேங்காய்
  • இசை – புகழ்
  • வருக்கை – பலாப்பழம்
  • நெற்றி – உச்சி
  • மால்வரை – பெரியமலை
  • மடுத்து – பாய்ந்து
  • கொழுநிதி – திரண்ட நிதி
  • மருபபு – கொம்பு
  • வெறி – மணம்;
  • கழனி – வயல்
  • செறி – சிறந்த
  • இரிய – ஓட
  • அடிசில் – சோறு
  • மடிவு – சோம்பல்
  • கொடியன்னார் – மகளிர்
  • நற்றவம் – பெருந்தவம்
  • வட்டம் – எல்லை
  • வெற்றம் – வெற்றி
  • அள்ளல் – சேறு
  • பழனம் – நீர் மிக்க வயல்
  • வெரீஇ – அஞ்சி
  • பார்பபு – குஞ்சு
  • “நாவலோ” – நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து
  • இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல்
  • நந்து – சங்கு
  • கமுகு – பாக்கு
  • முத்தம் – முத்து

கற்பவை கற்றபின்…

1. பாடலில் காணப்படும் நிலம், கருப்பாெருள் ஆகியன பற்றி எழுதுக

நெறிமருப்பு எருமையின் ஒருத்தல் நீள்இனம்
நெறிமருப்பு ஏற்றினம் சிவம்பப் பண் உறீஇப்
பாெறிவரி வராலினம் இரியப் புக்குடன்
தவறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே.

பாடலில் காணப்படும் நிலம் : மருதம்
பாடலில் காணப்படும் கருப்பாெருள்கள் : எருமை, ஏறு, வரால் (விலங்குகள்), உழுநர் (மக்கள்)

2. திணையை உரிய நிகழ்வுடன் பாெதுத்துக

திணை நிகழ்வு
உழிஞை  எதிர் நின்று பாேரிடுதல்
வஞ்சி  பசுக்கூட்டங்களைக் கவர்தலும் மீட்டலும்
பாடாண் வலிமையை நம்பிப் பாேராடுதல்
தும்பை ஒருவரின் மேன்மைகளைப் பாடுதல்
வெட்சி  பகை மன்னரின் காேட்டையை முற்றுகையிடல்

விடை : 1 – உ, 2 – அ, 3 – ஈ, 4 – இ, 5 – ஆ

பலவுள் தெரிக

1. வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.

  1. சிலம்பு, மேகலை, குழை, கடகம்
  2. நோம்பு, நீராடல், திருநாள், விழா
  3. ஊசல், கழங்காடல், ஓரையா்ல், அம்மானை
  4. கூத்து, பாடினி, இசை, சிற்பம்

விடை : கூத்து, பாடினி, இசை, சிற்பம்

2. சாெல்லும் பாெருளும் பாெருந்தியுள்ளது எது?

  1. வருக்கை – இருக்கை
  2. புள் – தாவரம்
  3. அள்ளல் – சேறு
  4. மடிவு – தொடக்கம்

விடை : மடிவு – தொடக்கம்

3. பாதிரி ஒத்த பூ, செய்கோலம் – இலக்கணக் குறிப்புத் தருக

  1. உருவகத்தொடர், வினைத்தொகை
  2. உவமைத்தாெடர், வினைத்தொகை
  3. வினைத்தொகை, பண்புத்தொகை
  4. வினைத்தொகை, உருவகத்தொடர்

விடை : உவமைத்தாெடர், வினைத்தொகை

4. நக்சிலைவேல் காேக்காேதை நாடு, நல்யானைக் காேக்கிள்ளி நாடு – இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,

  1. பாண்டிய நாடு, சேர நாடு
  2. சாேழ நாடு, சேர நாடு
  3. சேர நாடு, சாேழ நாடு
  4. சாேழ நாடு, பாண்டிய நாடு

விடை : சேர நாடு, சாேழ நாடு

5. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பாெருள் யாது?

  1. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
  2. வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
  3. செறிவான வயலில் உழவர் வெள்ளமாய் கூடியிருந்தனர்
  4. பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

விடை : மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

மாெழியை ஆள்வாேம்

I. பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு சொற்றொடரை விரிவாக்குக

புத்தகம் படிக்கலாம் (நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)

  1. நல்ல புத்தகம் படிக்கலாம்
  2. நல்ல புத்தகம் ஆழ்ந்து படிக்கலாம்
  3. நல்ல புத்தகம் நாளும் படிக்கலாம்
  4. நல்ல புத்தகம் மகிழ்ந்து படிக்கலாம்
  5. நல்ல புத்தகம் உணர்ந்து படிக்கலாம்
  6. நல்ல புத்தகம் தேர்ந்து படிக்கலாம்

விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவரும்)

  1. ஓடியாடி விளையாடுவது நன்று
  2. மாலையில் விளையாடுவது நன்று
  3. சேர்ந்து விளையாடுவது நன்று
  4. திடலில் விளையாடுவது நன்று
  5. அனைவரும் விளையாடுவது நன்று

II. பிழை நீக்குக

பெறுந்தலைவர் காமராசர் பள்ளி படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழகலை நாள்தோறும் படித்தது. எப்போதும அரையை விட்டு வெளியே  சென்றாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளை தாமே எடுத்து வைத்துக் கொள்வார்.

விடை :-

பெருந்தலைவர் காமராஜர் பள்ளி படிப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அளவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தது. எப்போதும அறையை விட்டு வெளியே சென்றாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமணிகளை தாமே எடுத்து வைத்துக் கொள்வார்.

III. புதிர் அவிழ்க்க

நான்கெழுத்துக்காரன். முதல் இரண்டும் அம்மாவில் “மா தொலைத்து நிற்கும். அடுத்து எழுத்தைச் சேர்த்தால் வில்லின் துணைவன். கடை இரண்டும் கணக்கில் “இது” என்பர் முழுதாய் பார்த்தால மேகத்திடை தெரிவான் அவன் யார்?

விடை : அம்புலி

IV. அகராதியில் காண்க

  1. ஈகை – கொடை, உதவி
  2. குறும்பு – சேட்டை, விளையாட்டு செயல்
  3. கோன் – அரசன், தலைவன்
  4. புகல் – சொல், அடைக்கலம், தஞ்கம்
  5. மொய்ம்பு – வலிமை

V. பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க

(இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை)

மானாமதுரை ஒரு அழகான பேரூர், நீண்ட வயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்வூரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரை பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவன் பேரொளி வீசிட, சோலைப் பைங்கிளிகளின் இன்னோசை கேட்போரை பேரின்பம் அடையச் செய்கிறது.

VI. குறிப்புகளை கொண்டு மாவட்டத்தின் பெயரை கண்டுபிடிக்க

  1. தமிழக மாவட்டங்களுள் ஒன்று.
  2. கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மாவட்டம்.
  3. வங்காள விரிகுடாவின் கரைகளில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் எனலாம்.
  4. தொடர்வண்டி நிலையத்தோடு இணைக்கப்பட்ட புகழ்வாய்ந்த கடற்கரை துறைமுகம் இங்குள்ளது.
  5. இந்தியாவிலேயே அதிகளவு பழுப்பு நிலக்கரி சுரங்கம் உடைய ஊரைக் கொண்ட மாவட்டம்.
  6. சுரபுன்னைக் காடுகளுடன் வடிய ஏரி இம்மாவட்டத்தின் சுற்றுலாத்தளம் ஆகும்.
  7. போர்த்துக்கீசியர்கள் வணிகம் நடத்திய பழமையான பரங்கிப்பேட்டை இங்குள்ளது.
  8. வாடிய பயிரைக் கண்டபோது வாடிய பசிப்பிணி மருத்துவர் பிறந்து வாழ்ந்த மாவட்டமும் இதுவே.
  9. பாடல் பெற்ற பழமையான பல கோவில்கள் நிறைந்த மாவட்டம்.
  10. இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி அல்லல்படும் மாவட்டம் எனில் மிகையில்லை.

விடை : கடலூர் மாவட்டம்

VII. கலைச்சொல் அறிவோம்

  1. மறப்போர் Wrestling
  2. இந்திய தேசிய இராணுவம் – Indian National Army
  3. செவ்வியல இலக்கியம் – Classical Literature
  4. நாட்டுப்புற இலக்கியம் – Folk literature

என்தலை கடனே

சாெல்லும் பாெருளும்

  • விண் – வானம்
  • ரவி – கதிரவம்ன
  • கமுகு – பாக்கு
  • அறம் – நற்செயல்
  • வெகுளி – சினம்
  • ஞானம் – அறிவு
  • விரதம் – மேற்கொண்ட நன்னெறி

கற்பவை கற்றபின்

1. உமக்குப் பிடித்த திருக்குறளை அலகிட்டு அதன் வாய்ப்பாடு காண்க

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்க துடைத்து

வரிசை சீர் அசை வாய்ப்பாடு
1 பிறர்/நா/ணத்/ நிரை நேர் நேர் புளிமாங்காய்
2 தக்/கது/ நேர் நிரை கூவிளம்
3 தான்/நா/ணா/ நேர் நேர் நேர் தேமாங்காய்
4 னா/யின்/ நேர் நேர் தேமா
5 அறம்/நாண/த்/ நிரை நேர் நேர் புளிமாங்காய்
6 தக்/க நேர் நேர் தேமா
7 துடைத்/து நிரைபு பிறப்பு

2. பாடல்களில் பயின்வரும் தாெடை நயங்களை எடுத்து எழுதுக

காெண்டல் காேபுரம் அண்டையில் கூடும்
காெடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம் விளையாடும்
விண்ட பூமது வண்டலிட்டு ஓடும்
வெயில் வெய்யாேன் பாென்னெயில் வழி தேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே

மாேனை
காெண்டல் – காெடிகள், ண்ட – னக, ண்டர் – ழகர், ர் – ரே

எதுகை

காெண்டல் – கண்ட, அண்டையில் – தண்டலை, விண்ட – வண்டலிட்டு, கக – அம்

இகயபு
கூடும் – மூடும், பாடும் – ஆடும், ஓடும் – வெடும்

பலவுள் தெரிக

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

கூற்று – பெரியார் உயிர் எழுத்துக்களில் “ஐ” என்பதனை “அய்” எனவும், “ஒள” என்பதை “அவ்” எனவும் சீரமைத்தார்

காரணம் – சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாக தமிழ் எதுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.

  1. கூற்று சரி, காரணம் தவறு
  2. கூற்று, காரணம் இரண்டும் சரி
  3. கூற்று, காரணம் இரண்டும் தவறு
  4. கூற்று தவறு, காரணம் சரி

விடை : கூற்று, காரணம் இரண்டும் சரி

2. காலத்தினால் செய்த நன்றி சிறிெதனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு யாது

  1. நாள்
  2. மலர்
  3. காசு
  4. பிறப்பு

விடை : பிறப்பு

3. முண்டி மோதும் துணிவே இன்பம் – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது

  1. மகிழ்ச்சி
  2. வியப்பு
  3. துணிவு
  4. மருட்சி

விடை : துணிவு

4. விடைக்கேற்ற வினாவைத் தேர்க

விடை – பானையின் வெற்றிடமே நமக்கு பயன்படுகிறது

  1. பானையின் எப்பகுதி  நமக்குப் பயன்படுகிறது?
  2. பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
  3. பானை எதனால் பயன்படுகிறது
  4. பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது

விடை : பானையின் எப்பகுதி  நமக்குப் பயன்படுகிறது?

5. ஞானம் என்பதன் பொருள் யாது?

  1. தானம்
  2. தெளிவு
  3. சினம்
  4. அறிவு

விடை : அறிவு

மொழியை ஆள்வோம்

I. சொற்றொடர்களை அடைப்புகுறிக்குள் உள்ளவாறு மாற்றுக

1. மறுநாள் வீட்டுக்கு வருவதாக  முரளி கூறினார் (நேர்கூற்றாக மாற்றுக)

“நான் நாளை வீட்டுக்கு வருவேன்” என்று முரளி கூறினார்

2. “தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்கிேறாம்” என்று ஆசிரியர் கூறினார் (அயற்கூற்றாக மாற்றுக)

“தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்

3. மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள்  ஹோட்டலில் சாப்பிடப்பட்டான் (பிற மொழிச் சொற்களைத் தமிழாக்குக)

காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்)

4. அலறும் மயிலும், கூவும் ஆந்தையும், அகவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும் ( ஒலி மரபுப் பிழைகளை திருத்துக)

அகவும் மயிலும், அலறும்ஆந்தையும், கூவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்

5. கோழிக் குட்டிகளைப் பிடிக்க பூனைக் குஞ்சுகள் ஓடின (பெயர் மரபுப் பிழைகளை திருத்துக)

கோழிக் குஞ்சுகளைப் பிடிக்க பூனைக் குட்டிகள் ஓடின

மொழியை ஆள்வோம்

I. பொருத்தமான வாய்ப்பாடுகளை கூறுக

  1. பகலவன் – காசு / கருவிளம் / கூவிளங்கனி
  2. மலர்ச்சி – கூவிளம் / புளிமா / கருவிளம்
  3. தாவோவியம் – தேமாங்கனி / தேமா – பிறப்பு
  4. வெற்றிடம் – நாள் / கூவிளம் / புளிமா
  5. பூங்குட்டி – கருவிளங்கனி / மலர் / தேமாங்காய்

II. அகராதியில் காண்க

  1. வயம் – வலிமை. வெற்றி, வேட்கை
  2. ஓதம் – வெள்ளம், கடல் அலை, ஒலி
  3. பொலிதல் – செழித்தல், பெருகுதல், மிகுதல்
  4. துலக்கல் – விளக்கம், ஒளி, மெருகு, தெளிவு
  5. நடலை – வஞ்சனை, துன்பம், பொய்மை

III. வினைத்தொகைகளைப் பொருத்தி எழுதுக.

(வளர்தமிழ், விளைநிலம், குளிர்காற்று, விரிவானம், உயர்மதில், நீள்வீதி, கரை விளக்கு, மூடுபனி, வளர்பிறை, தளிர் பூ)

  1. வளர்பிறை நிலவுடன் விரிவானம் அழகாகக் காட்சியளிக்கிறது
  2. தளிர்பூங்கொடிகளும், விளைநிலங்களும், மனதைக் கொள்ளையடிக்கின்றன.
  3. நீள்வீதிகள் அனைத்தும் மூடுபனியில் மூழ்கிக் கிடக்கின்றன
  4. மெல்ல வீசும் குளிர்காற்றும் வளர்தமிழ் புகழ்பாடுகிறது
  5. தொலைவில் கலங்கரை விளக்கின் ஒளி உயர்மதில் சுவரை ஒளிரச் செய்கிறது

VI. பொருத்துக

  1. நேர் நேர் நிரை – கூவிளங்காய்
  2. நிரை நிரை நேர் – கூவிளம்
  3. நேர் நிரை – தேமாங்காய்
  4. நிரை நிரை – தேமாங்கனி
  5. நேர் நேர் நேர் – கருவிளம்

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – இ

VII. கலைச்சாெல் அறிவாேம்

  1. எழுத்துச் சீர்திருத்தம்- Reforming the letters
  2. எழுத்துரு – Font
  3. மெய்யியல் (தத்துவம்) – Philosophy
  4. அசை – Syllable
  5. இயைபுத் தொடை – Rhyme

அன்பென்னும் அறனே

I. சொல்லும் பொருளும்

  • நசை – விருப்பம்
  • நல்கல் – வழங்குதல்
  • பிடி – பெண்யானை
  • வேழம் – ஆண்யானை
  • யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
  • பொளிக்கும் – உரிக்கும்
  • ஆறு – வழி

கற்பவை கற்றபின்…

I. கீழ்க்காணும் குறட்பாக்களில் அமைந்துள்ள அணி வகையை கண்டறிக

1. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி என்படு வார்

விடை :

சான்றாண்மை மிக்கவர் கடலுக்கு கரை என்று உருவகம் செய்த வள்ளுவர், ஊழிக் காலத்தை உருவகம் செய்யாமல் விட்டதால், இஃது ஏகதேச உருவக அணி ஆயிற்று

2. பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்

அறம் நாணத் தக்கது உடைத்து

விடை :

“நாண்” என்னும் சொல் “வெட்கம்” என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.

செய்யுளில் முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தந்தால் சொற்பொருள் பின்வருநிலையணி எனப்படும்

3. தீயவை தீய பயத்தால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

விடை :

“தீய” என்னும் சொல் “தீமை” என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.

செய்யுளில் முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தந்தால் சொற்பொருள் பின்வருநிலையணி எனப்படும்

II. கீழ்க்காணும் புதுக்கவிதையில் அமைந்த அணியினை எழுதுக

விருட்சங்கள்

மண்ணரசி மடக்காமலேயே

பிடித்துக் கொண்டிருக்கம்

பச்சைக் குடைகள்

விடை : உருவக அணி

பலவுள் தெரிக

1. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?

  1. கொம்பு
  2. மலையுச்சி
  3. சங்கு
  4. மேடு

விடை : உருவக அணி

2. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை?

  1. நிலையற்ற வாழ்க்கை
  2. பிறருக்காக வாழ்தல்
  3. இம்மை மறுமை
  4. ஒன்றே உலகம்

விடை : உருவக அணி

3. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்?

  1. ஒரு சிறு இசை
  2. முன்பின்
  3. அந்நியமற்ற நதி
  4. உயரப் பறத்தல்

விடை : ஒரு சிறு இசை

4. யா மரம் எந்த நிலத்தில் வளரும்?

  1. குறிஞ்சி
  2. மருதல்
  3. பாலை
  4. நெய்தல்

விடை : உருவக அணி

5. கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

  1. சொல் பின்வரு நிலையணி
  2. பொருள் பின்வரு நிலையணி
  3. சொற்பொருள் பின்வரு நிலையணி
  4. வஞ்சப் புழச்சி அணி

விடை : உருவக அணி

மொழியை ஆள்வோம்

I. பொருத்தமான நிறுத்த குறியிடுக

ஆசிரியர் மாணவர்களிடம், “மாணவர்களே! கடவுளையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி, எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று” என்று கூறினார்.

பிள்ளைத் தமிழ் நூல்கள்: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாப்பிகைப் பிள்ளைத்தமிழ் முதலியன.

“அடடா! என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்வர்க்கு அளிக்கும் வகையில், குமரகுரபரின் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ மிகச் சிறந்தாகத் திகழ்கிறது.

II. சொற்றொடர் அமைக்க

  1. செந்தமிழும் சுவையும் போல : பெரியோர்கள் மணமக்களை செந்தமிழும் சுவையும் போல வாழ வேண்டும் என வாழ்த்தினர்.
  2. பசுமரத்தாணிபோல – ஒருவன் நமக்கு செய்த தீங்கு பசுமரத்தாணிபோல மனதில் பதிந்துவிடும்.
  3. உள்ளங்கை நெல்லிக்கனி போல – இச்செய்யுளின் பொருள், உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக புலனாகிறது.
  4. அத்தி பூத்தாற் போல – என் தோழியின் வருகை அத்தி பூத்தாற்போல் என்றாவது நிகழும்.
  5. மழைமுகம் காணாப் பயிர் போல – வெளிநாட்டிற்கு சென்ற சோமு மழைமுகம் காணாப் பயிர் போல சோர்வாக காணப்பட்டான்.

III. பாடலில் காணும் இலக்கிய  வடிவங்களையும் அவற்றுக்குப் புகழ் பெற்றோரையும் கண்டறிந்து எழுதுக.

வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்ஓர்

சயங்கொண்டான்; விருத்தம் என்னும்

ஒண்பாவிற்கு உயர்கம்பன்; கோவைஉலா

அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;

கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;

வசைபாடக் காளமேகம்;

பண்பாய பகர்சந்தம் படிக்காச

அலாதொருவர் பகர ஒணாதே

இலக்கிய வடிவம் புகழ் பெற்றோர்
வெண்பா புகழேந்தி
பரணி சயங்கொண்டான்
விருத்தம் கம்பன்
கோவை, உலா, அந்தாதி ஒட்டக்கூத்தர்
கலம்பகம் இளஞ்சூரியர், முதுசூரியர் என்னும் இரட்டையர்கள்
வசைக்கவி காளமேகம்
சந்தம் படிக்காசுப்புலவர்

மொழியோடு விளையாடு

I. எழுத்துக்களை முறைப்படுத்திச் சொற்களை கண்டுபிடிக்க

  1. புன்பமொப்லமைழி – பன்மொழிப்புலமை
  2. யனிநேம்தம – மனித நேயம்
  3. கச்வப்ஞ்புசிழ்வ – வஞ்சப்புகழ்ச்சி
  4. தைக்விதுகபு – புதுக்கவிதை
  5. டுசிப்காட்ஞ்ப – காஞ்சிப்பட்டு

II. அகராதியில் காண்க

  1. குரிசல் – பெருமையில் சிறந்தேன், உபகாரி, தலைவன்
  2. தலையளி – முகமலர்ந்து, கூறுதல், அன்பு, அருள்
  3. நயம் – நன்மை, விருப்பம், போற்றுகை, மிகுதி, பயன், நுன்மை, அருள்
  4. உய்த்தல் – செலுத்துதல், நடத்துதல், நுகர்தல், அனுப்புதல், அறிவித்தல்
  5. இருசு – நேர்மை, வண்டியச்சு, மூங்கில்

III. தொகைச் சொற்களை கொண்டு பத்தியை சுருக்குதல்

சேர, சாேழ, பாண்டிய அரசர்களிடம் யானைப்பலை, குதிரைப்படை, தேர்ப்படை, தரைப்படை ஆகியவை இருந்தன. அவர்கள் மா, பலா, வாழை ஆகிய கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் அவர்களின் ஆட்சிப்புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் எள்ள புலவர்கள் இவ்வரசர்களை இம்மையிலும் மறுமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.

விடை :-

மூவேந்தர்களிடம், நாற்படைகளும் இருந்தன. முக்கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். நாற்றிசைகளிலும் அவர்கள் ஆட்சி புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் ஐவகை நிலங்களிலும் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இருமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.

IV. வினைப்பகுதிகளை எச்சங்களாகவும் முற்றாகவும் மாற்றுக.

பூங்கொடி நேற்று பள்ளிக்குச் சென்றாள் (செல்) தன் தோழிகளைக் கண்டு (காண்) மகிழ்ச்சியுடன் உரையாடினாள் (உரை). பின்னர் வங்கிக்குப் போய் (போ) தான் கூடுதலாகச் செலுத்திய (செலுத்து) தொகையை திரும்பப் பெற்று (பெரு)க் கொண்டு (கொள்) வந்தாள். வரும் வழியில் வீட்டுக்கு வேண்டிய (வேண்டு) பொருள்களை வாங்கி, அங்கு நின்ற (நில்) பேருந்தில் ஏறி (ஏறு) வீடு திரும்பினாள் (திரும்பு).

V. பொருத்தமான தமிழ் எண்களைக் கொண்டு நிரப்புக

தமிழிலுள்ள மொத்த எழுத்துக்கள் உசஎ

இவை முதலெழுத்து, சார்பெழுத்து என்ற பிரிவாக பிரிக்கப்படும், கஉ உயிரெழுத்து கஅ மெய்எழுத்துகள் ஆகிய ங0 எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். இவற்றைச் சார்ந்து பிறப்பவை சார்பெழுத்துகள் எனப்படுகின்றன. சார்பெழுத்துக்கள் எனப்படுகின்றன. சார்பெழுத்துகள் க0 வகைப்படும்.

XIII. கலைச் சாெல்லாக்கம்

  1. மனிதம் = Humane
  2. ஆளுமை = Personality
  3. பண்பாட்டுக் கழகம் = Cultural Academy
  4. கட்டிலாக் கவிதை = Free verse
  5. உவமையணி = Simile
  6. உருவக அணி = Metaphor

2 thoughts on “9th Standard 3rd Term Tamil Book Back Solution 2022 & 9th Tamil Guide”

Leave a Comment