அரசு பள்ளி சத்துணவு மையங்களில் வேலை
பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில் கரூர் மாவட்ட அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய நபர்களை தேர்வுசெய்யும் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.
Noon Meal Organisers & Cooking Assistants
தேர்வு செய்யும் அமைப்பு | PT MGR NMP கரூர் |
வேலை இடம் | கரூர் மாவட்டம் முழுவதும் |
மொத்த பணியிடங்கள் | 422 |
கல்வி தகுதி | 5 ஆம் வகுப்பு / 8 ஆம் வகுப்பு / 10 ஆம் வகுப்பு |
காலிப்பணியிட விவரங்கள்
சத்துணவு அமைப்பாளர் | 158 |
சமையல் உதவியாளர் | 264 |
வயது வரம்பு
வயது வரம்பானது 31-8-2020 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.
சத்துணவு அமைப்பாளர் பதவிக்கான குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் | 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
பழங்குடியினர் | 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் | 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
மாற்று திறனாளிகள் | 43 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். |
சமையல் உதவியாளர் பதவிக்கான குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் | 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
பழங்குடியினர் | 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் | 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
கல்வி தகுதிகள்
சத்துணவு அமைப்பாளர் பதவிக்கான கல்வி தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
பழங்குடியினர் | எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி |
சமையல் உதவியாளர் பதவிக்கான கல்வி தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் | 5 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி |
பழங்குடியினர் | எழுது படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. |
முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் | 24-9-2020 |
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடேசி நாள் | 30-9-2020 |
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான நபர்கள், விண்ணப்பத்தினை ஊ ராட்சி ஒன்றியம் / நகராட்சி அலுவலகத்தில் பெற்று,
அவற்றை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய / நகராட்சி அலுவலங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய இணைப்புகள்
அதிகாரபூர்வ இணையத்தளம் | Click Here |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் | முழு விவரம் |