14th September 2023 – Current Affairs in Tamil | நடப்பு நிகழ்வுகள்

TNPSC Current Affairs 14th September 2023

Here are the one-liner current affairs for September 14th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.

Tamilnadu Current Affairs

பசுமை ஹைட்ரஜன் மையம் (Green Hydrogen Centre)

TNPSC Current Affairs - Green Hydrogen

  • ஒன்றிய அரசானது தமிழ்நாட்டில் கீரன் ஹைட்ரஜன் வேலி இன்னேவேஷன் சென்டரை அமைக்க  ஒப்புதல் அளித்துள்ளதால் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) & சென்னை ஐஐடி இணைந்து பசுமை ஹைட்ரஜன் மையத்தை அமைக்க உள்ளது.
  • ரூ.100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இம்மையத்தில் தினமும் சுமார் 500டன் அளவில் ஹைட்ரஜனை உற்பத்தி செய்து திரவமாக சேமிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • திரவ ஹைட்ரஜனால் இயங்கும் உலகின் முதல் மின்சார விமானமானது ஸ்வோனியா  நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • ஹரியானாவில் ஜிந்த – சோனிபட் இடையேயான வழித்தடத்தில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தொடங்கப்பட்டது
  • சீனாவில் ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையையும், ஜெர்மனியில் உலகில் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையையும் தொடங்கப்பட்டுள்ளன

சாலையோர வியாபரிகள் நலவாரியம்

TNPSC Current Affairs - Welfare assistance to Road side traders

  • தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு தமிழக அரசானது சாலையோர வியாபரிகளின் நலன்களை பாதுகாக்க தமிழ்நாடு சாலையோர கடைகள் மற்றும் வணிக நிறுவன வியாபாரிகள் நல வாரியத்தினை (Welfare assistance to Road side traders)  அமைத்துள்ளது.

National Current Affairs

யானை வழித்தடங்கள் (Elephant Tracks)

TNPSC Current Affairs - Elephant Tracks

  • இந்தியாவில் 2010-ல் 88-ஆக இருந்த யானை வழித்தடங்கள் தற்போது 150 யானை வழித்தடங்களாக உயந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 26 யானை வழித்தடங்கள் அமைந்துள்ளன.
  • உலக யானைகள் தினமானது ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ல் கொண்டாடப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள் 

  • தற்போது தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 2961-ஆக உயர்ந்துள்ளது.
  • ஒன்றிய அரசானது புலிகள் திட்டத்தையும்,யானைகள் திட்டத்தையும் இணைத்து புலி மற்றும் யானை திட்டப்பிரிவை உருவாக்கியுள்ளது.
  • “திட்டம் கஜா கோதா (Project Gajah Kotha)” என்ற பெயரில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான சண்டையை குறைக்கும் திட்டத்தினை அசாமில் செயல்படுத்தப்படுகிறது
  • யானைகள் திருவிழாவான கஞ்உத்சவ் திருவிழா அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது.

கருத்தரங்கம் – துவக்கம்

TNPSC Current Affairs - First Global Symposium on Farmers' Rights

  • தில்லியில் விவசாயிகளின் உரிமைகள் தொடர்பான முதல் உலகாளவிய கருத்தரங்கத்தை (First Global Symposium on Farmers’ Rights) குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு துவங்கி வைத்துள்ளார்.
  • 2001-ல் கொண்டு வரப்பட்ட பயிர் வகைகளின் பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமைகள் சட்டமானது ஒட்டு மொத்த உலகம் முழுவதும் பின்பற்ற தக்க வகையில் முன்னுதாரணமாக திகழ்வதாக குடியரசுத்தலைவர் தெரிவித்துள்ளார்.
  • இச்சட்டத்தின் மூலம் விவசாயிகள் விதைகளை பயன்படுத்தவும், பாதுகாக்கவும், பகிர்ந்த கொள்ளவும், விற்கவும் இயலும். மேலும் விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான விதைகளைப் பதிவு செய்து கொள்ளவும் முடியும்.

சி295 விமானம் (C295 Aircraft)

TNPSC Current Affairs - C295 Aircraft

  • ஸ்பெயனின் ஏர்பஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள சி295 விமானம் இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.செளத்திரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
  • இந்திய அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு ஏர்பஸ் நிறுவனத்திடம் 56 சி2965 விமானங்களை ரூ.21,935 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.

புதிய இலவச சமையல் எரிவாயு இணைப்புகள்

TNPSC Current Affairs - Ujjwala Yojana Scheme

  • 2016 மே 1-ல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் (Pradhan Mantri Ujjwala Yojana Scheme) கீழ் 75 இலட்சம் புதிய இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கையானது 10.35 கோடியாக அதிகரித்துள்ளது.
  • ரூ.1650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2015-ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிருஷி சின்சாயி (PMKSY – Pradhan Mantri Krishi Sinchai Yojana) திட்டமானது மத்திய அரசால் ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்டது.
  • பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு திட்டமானது (PMJAY – Pradhan Mantri Jan Arogya Yojana) 2018-ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது உருவாக்கப்பட்டது.

இணைய நீதிமன்றம் 3.0

  • எளிதில் அனுப்புதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தத்துவ அடிப்படையில் தொடங்கப்பட இணைய நீதிமன்ற 3வது கட்ட திட்டத்திற்காக ரூ.7510 கோடியை ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இணைய நீதிமன்றம் என்பது காகித பயன்பாடற்ற நீதிமன்றங்களாக மாற்றம் செய்யும் திட்டமாகும்

குற்றவியல் வழக்குகள் – நாடாளுமன்றத்தின் எம்.பி.க்கள்

  • நாடாளுமன்றத்தின் 40% எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசோசியேஷன்ஃபார் டெமாக்ரேடிக்க ரிஃபார்ம்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

கட்சி வாரியாக எம்.பி.க்களின் குற்ற வழக்குகள்

கட்சி குற்ற வழக்குகள் உள்ள எம்.பி.க்கள் கட்சி எம்.பி.க்களில் குற்ற வழக்குள்ளோர் சதவீதம்
பாஜக 139 36%
காங்கிரஸ் 43 53%
தி.மு.க 13 38%
அ.தி.மு.க 1 20%

தொடர்புடைய செய்திகள்

  • பணக்காரர்கள் எம்எல்ஏக்களை கொண்ட கட்சிகள் பட்டியல் முலாவது இடத்தை பி.ஜே.பியும், 2வது இடத்தை காங்கிரஸ் கட்சியும், 6வது இடத்தை தி.மு.கவும் பிடித்துள்ளன.
  • அதிக கோடீஸ்வர எல்எல்ஏக்கள் உள்ள மாநிலமாக கர்நாடகா திகழ்கிறது.
  • கோடீஸ்வர எம்எல்ஏ-வாக கர்நாடகா மாநிலத்தின் டி.கே.சிவகுமாரும் ஏழ்மையான எம்எல்ஏ-வாக மேற்கு வங்கத்தின் நிர்மல்குமாரும் திகழ்கின்றன.
  • ஆந்திராவின் ஜெகன்மோகன்ரெட்டி கோடீஸ்வர முதல்வராகவும், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி ஏழ்மையான முதல்வராகவம் உள்ளனர்

லஞ்ச ஒழிப்பு வாரம் (Anti-Bribery Week) 

TNPSC Current Affairs - Anti-Bribery Week

  • “லஞ்சம் கேட்டால் இல்லை என்று சொல்லுங்கள்; நாட்டுக்காக செயலாற்றுங்கள்” என்ற தலைப்பில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 6 வரை லஞ்ச ஒழிப்பு வாரமாக கடைபிடிக்கப்பட உள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Sports Current Affairs

சைமோனா ஹேலப் – விளையாட தடை

TNPSC Current Affairs - Simona Halep

  • ருமேனியா நாட்டின் டென்னிஸ் வீராங்கனையானசைமோனா ஹேலப்பிற்குநான்கு ஆண்டுகள் விளையாட தடை விதித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ITF) உத்தரவிட்டுள்ளது.
  • இவர் ஊக்க மருந்து தடுப்பு விதியினை மீறியதற்காக இத்தடையானது விதிக்கப்பட்டுள்ளது.
  • 03.01.1913-ல் ITF (International Tennis Federation) அமைப்பானது இங்கிலாந்தின் லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

Important Days and Dates – 14th September 2023

தேசிய ஹிந்தி தினம் (Hindi Diwas) Sep 14

TNPSC Current Affairs - Hindi Diwas

  • 14.09.1949 செப்டம்பர் 14-ல் இந்தியாவின் அலுவல் மொழியாக ஹிந்தி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது
  • இந்த நாளானது ஆண்டுதோறும் தேசிய ஹிந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.

 

–> More Days

Daily Current Affairs

Leave a Comment