சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப்-இல் தயாரிக்கப்பட்ட 11-வது வந்தே பாரத் ரயிலை ரயில்வே வாரியத்திடம் ஐ.சி.எஃப் ஒப்படைத்தது.
அதி வேகமான “ரயில் 18” என்ற நவீன விரைவு ரயில் சென்னை பெரம்பூர் இ.சி.எஃப்-இல் முதன் முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது
இந்த இரயிலுக்கு “வந்தே பாரத் ரயில்” என்று பெயரிடப்பட்டது.
இந்த ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்கள்
சென்னை – மைசூரு
தில்லி – வாரணாசி
தில்லி – காத்ரா
காந்திநகர் – மும்பை
தில்லி – யுனா (ஹிமாசல பிரதேசம்)
பிலாஸ்பூர் – நாக்பூர்
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் – சாய்நகர் ஷீரடி
ஹவுரா – நியூ ஜல்பைகுரி
செகந்திராபாத் – விசாகப்பட்டினம்
சோலாப்பூர் – மும்மை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்
2023 பிப்ரவரி மாதத்தின் “வானவில் மன்றம்” போட்டிகள் சென்னையில் தொடங்கப்பட உள்ளன.
“எங்கும் அறிவியல், யாவும் கணிதம்” என்பதை அடிப்படை முழக்கமாக – 28.10.2022 இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ஜீனாகத்தில் வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டியின் “கிஸான் பவன்” கட்டத்தை அமித்ஷா திறந்து வைத்தார்.
ட்விட்டர், முகநூல் வழியாக நிதிநிலை அறிக்கை விவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியயில் இந்தியா 28%வுடன் முதலிடம்.
காசி தமிழ் சங்கமத்தை அடுத்து இரண்டாவது நிகழ்வாக குஜராத்தில் ஏப்ரல் 17-26வரை செளராஷ்டிரம்-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
18.11.2022 முதல் 16.12.2022வரை வாரணாசிக்கும் தமிழகத்துக்கும் இடையேயான பழங்கால கலாச்சார நாகரிக தொடர்பை புதுப்பிக்கும் “காசி-தமிழ்ச் சங்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது.
சரக்கு-சேவை வரி (ஐிஎஸ்டி) ஏய்ப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைககளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு.
மறைமுக வரி நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
டைம் இதழ் வெளியிட்டுள்ள 2023-ம் ஆண்டின் உலகின் மிகசிறந்த 50 இடங்களில் இந்தியாவின் “மயூர்பஞ்சி, லடாக்” ஆகியன இடம்பெற்றுள்ளது.
131.5 கி.மீ. தொலைவிற்கு ரூ.377கோடி செலவில் இந்தியா, வங்கதேசம் இடையலான எல்லை கடந்த முதல் எரிசக்தி குழாய் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழாய் நுமலிகார் எண்ணெய் சத்திகரிப்ப ஆலை முனையம் (அஸ்லாம்) முதல் வங்கதேசத்தின் பார்பதிபூர் பெட்ரோலிய கழக பணிமனை வரை செல்கிறது.
“புதிய நக்ஸல் ஒழிப்பு கொள்கை”யை சத்திஸ்கர் அரசு வகுத்துள்ளது
இத்திட்டத்தின்படி சரணடையும் நக்ஸல்களுக்கு ரூ.10லட்சம் நிதியுதவி
நக்ஸல் ஒருவர் பற்றி தகவல் அளித்தால் ரூ.5லட்சம் பரிசு அளிக்கப்படுகிறது.
மார்ச் 19-ல் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய நடைபந்தய சாம்பியன் போட்டியில் 20 கிமீ பந்தயத்தில் இந்தியாவின் விகாஷ் சிங் 1.20.05 மணிநேரத்தில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பெற்றார்.
பரம்ஜித் சிங் 1.20.08 மணி நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பெற்றார்.
இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி-டபிள்யுடிஏ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவல் இந்தியாவின் ரோஹன் போபன்னா – ஆஸ்திரேலியாவின் மேட் எப்டன் இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மகளிர் இரட்டையர் பிரிவில் கிரஜ்சிகோவா-சினியகோவா இணை பட்டம் வென்றது.