TNPSC Current Affairs in Tamil – 1st & 2nd December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 1st & 2nd December 2020

தமிழகத்தில் முதல் முதலாக தூத்துக்குடி ஊர்காவல்படைக்கு திருநங்கைகளான லட்சயா, ஸ்ரீஜா தேர்வு.
தமிழக நூலகத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட கடப்பேரியிலுள்ள நூலகத்தின் நூலகர் தி.சுந்தமூர்த்திக்கு “நல்நூலகர் விருது” அறிவிக்கப்பட்டது.
திருப்போரூர் நூலக வாசகர் வட்டத்திற்கு “நூலக ஆர்வலர்” விருதினை தமிழக நூலகத் துறை அறிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிகாக 10 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
சுழல் நிதியாக ரூ.16 கோடி நிதியை 7.5% இட ஒதுக்கீடு மாணவர்களுக்காக ஒதுக்கிடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
2018 – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழக கரிகாற்சோழன் விருது 3 எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது

  • தி.ஞானசேகர் (இலங்கை) – எரிமலை
  • ஏ.எஸ்.பிரான்சிஸ் (மலேசியா) – வானம் என்னும் போதிமரம்
  • அ.இன்பா (சிங்கப்பூர்) – மூங்கில் மனசு
வங்க கடலில் உருவான பயுலானது 4-ம் தேதி குமரி – பாம்பன் இடையில் கரையை கடக்கிறது. இப்புயலிற்கு மாலத்தீவு “புரவி” என்று பெயர் சூட்டியுள்ளது.
மத்திய அரசின் ஜன்தன் கணக்கு மற்றும் அரசின் நேரடி பணபரிமாற்றம் (டிபிடி) ஆகியவற்றால் கிராமப்புறங்களில் ஏடிஎம்.களை பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்திய தலைநகரான தில்லி உலக காற்று மாசுபாடு அதிகமுள்ள இடங்களில் 229 நுண்துகள் குறியீட்டுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது.
பாகிஸ்தானின் ஒற்றை யானை என அழைக்கப்படும் “காவன்” கம்போடியாவில் கொண்டு விடப்பட்டது.
சென்னை ஐஐடி இளம் தொழில் முனைவோர் மாற்றுத்திறனாளிகளுக்காக வசதிகளுடன் கூடிய நவீன சக்கர நாற்காலிகளை உருவாக்கியுள்ளனர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக இந்தியன் வங்கி இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியுடன் (சிட்பி) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ஆழ்கடல் நீச்சல் வீரர், பயிற்சியாளர் அரவிந்தன் தலைமயிலான குழு புதுச்சேரி கடல் பகுதியில் அரியவகை கொம்பு திருக்கை மீன்களை புகைப்படம் எடுத்துள்ளனர்.
எதிரி கப்பல்களை அழிக்கும் (300கி.மீ தூரம் வரை) பிரம்மோஸ் ஏவுகணை சோதனை அந்தமான் நிகோபர் தீவுகள் பகுதியில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்டெஃபானி ஃப்ராப்பார்ட் என்ற பெண்மணியை முதல் முறையாக கள நடுவராக ஐராேப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நியமித்துள்ளது.
ஈரான் அணு சக்தி மையங்களில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்வதை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை ஈரான் தன் நாடளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
செப்டம்பர் வரை 1433 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கபட்டுள்ளன என மத்திய அமைச்சர் பியூஸ்கோல் அறிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் இளம் திறமையார்களை கெளரவிக்கும் பாஃபாதா (பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்) அமைப்பின் முன்னெடுப்பு தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
மெர்சிடஸ் அணியின் ஹாமில்டன் பக்ரைன் பார்முலா-1 கார்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றார்.
2020, நவம்பர் மாத சரக்கு-சேவை வரி தமிழகத்தில் ரூ.7,084 கோடியும், இந்திய அளவில் ரூ.1,04,963 கோடியும் வசூலாகியுள்ளது.
மக்களவையின் புதிய தலைமைச் செயலாளராக உத்பல் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2020-21ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி -9 சதவீதமாக இருக்குமென சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான எஸ்&பி தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய ராணுவத்தின் உயரிய விருதான க்டோவிரியா கிராஸ் விருதினை  முதல் கடற்படை வீரர் பெட்டி ஷியான் ஆவார்.
மேகாலயா மாநிலத்தின் மின் விநியோகத் துறையினை சீரமைக்க மத்திய அரசிற்கும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் இடையே 132.8 மில்லியன் டாலர் மதிப்பில் கடன் ஒப்பந்தம் (டிசம் -1) கையெழுத்தானது.
மகாராஷ்டிரா இயற்கை எரிவாயு நிறுவனத்தின் 100-வது இயற்கை எரிவாயு நிலையத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்தார்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில் எஞ்சின் தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து 40-வது 6,000 குதிரை திறன் கொண்ட மின்சார இரயில் எஞ்சினை ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் துவக்கி வைத்தார்.
அஸ்ஸாம் அரசு தன் மாநிலத்தில் 29 மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் வீட்டின் பெண் தலைவரின் வங்கி கணக்கில் ரூ.830-யை செலுத்த “ஒருநோடி திட்டம்” என்ற திட்டத்தினை தொடங்க உள்ளது.
மத்திய அரசு “தாய் மங்கூர் (Thai Mangur)” என்ற வளர்ப்பு மீன் வகைகளுக்கு தடை செய்துள்ளது.
நாகலாந்தில் 10 நாள்  வருடாந்திர கலாச்சார விழாவான ஹார்ன்பில் திருவிழா (பண்டிகைகளின் திருவிழா)  டிசம்.1 முதல் 5வரை நடைபெறுகிறது. இத் திருவிழாவின் ஆரம்ப நாளான டிசம்.1 நாகலாந்து மாநில தினத்தை குறிக்கிறது.
இந்திய அரசு பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்துவதற்கான உச்ச குழுவை (Apex Committee for Implementation of Pairs Agreements (AIPA))அமைத்துள்ளது.
கேம்பிரிட்ஜ் அகராதியில் 2020-ல் அதிகமாக தேடப்பட்ட வார்த்தையாக “தனிமைப்படுத்தல்” என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளவர்களுக்கு இந்திய அரசு சார்பில் உதவிகள் வழங்கும் “டிஓபிஎஸ்” திட்டத்தில் 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  • சிம்ரன்ஜீத் கெளர் (உலககுத்து சண்டை போட்டியில் 60 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம்)
  • பூஜாராணி (ஆசிய போட்டியில் 75 கிலோ பிரிவில் பதக்கம்)
  • ஆஷிஷ் குமார் (ஆசிய போட்டியில் 75 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம்)
  • சதீஷ் குமார் (ஆசிய போட்டியில் 91 கிலோவுக்கு பிரிவில் வெள்ளிப் பதக்கம்)
எல்லை பாதுகாப்பு படையினரின் எழுச்சி தினம் (டிசம்-1)
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் (டிசம்-1)

கருப்பொருள் : Global Solidarity and Shared Responsibility

Related Links

Leave a Comment