TNPSC Current Affairs in Tamil – 21st December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 21st December 2020





ஆங்கில எழுத்துக்களை தலை கீழாக 5.071 நொடிகளில் தட்டச்சு செய்து சர்வதேச அளவில் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பகுதி குமார் என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
சாலை விதிகளை பின்பற்றாமலும் சரியான கட்டமைப்பு வசதி இல்லாமலும் சாலை விபத்தில் இந்தியா முழுவதும் 2019-ஆம் ஆண்டில் 25,858 இறந்துள்ளனர்.

  • 2018 ஆம் ஆண்டை விட 2019 இறப்பு 14% அதிகரிப்பு
நேபாள அதிபரான வித்யா தேவி பண்டாரி அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் பரிந்துரையையின்படி நாடாளுமன்றத்தை (கீழவை) கலைத்துள்ளார்.
டிசம் 22 முதல் 26 வரை இந்தியா-வங்கதேச எல்லை பேச்சுவார்த்தை குவாஹாட்டியில் நடைபெற உள்ளது.
டிசம்.20-ல் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்கள் கூடுதலாக ரூ.16,728 கோடி கடன் வாங்க மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதில் அடங்கும் மாநிலங்கள்

  • தமிழகம்
  • ஆந்திரா
  • கர்நாடகா
  • மத்திய பிரதேசம்
  • தெலுங்கானா
டிசம்.20-ல் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் அம்மாநிலத்தின் முதலாவது எண்ணெய் வயலில் கச்சா எண்ணெய் உற்பத்திப்பணியை பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

  • இந்தியாவின் 8-வது ஹைட்ரோ கார்பன் திட்டம்
இன்று (டிசம்.21) வியத்நாம் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
இன்று (டிசம்-21) 397 ஆண்டுகளுக்கு பிறகு வியாழன், சனி இரு கோள்களும் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு நடக்க இருக்கிறது.

  • இந்நிகழ்வு 1623 ஆண்டு நிகழ்ந்ததுள்ளது.
உலகின் மிகப்பெரிய விலங்கியல் பூங்கா குஜராத் மாநிலத்தில் 280 ஏக்கர் பரப்பளவில் ரிலையன்ஸ் குழுமம் அமைக்க உள்ளது. .

  • இந்த பூங்கா கிரீன்ஸ் ஜுவாலஜிகல், ரெஸ்க்யூ அண்ட் ரிஹாபலிடேஷன் கிங்டம் என அழைக்கப்படும்.
  • இதன் அருகே ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்ச்சாலை அமைய உள்ளது
1971-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் வென்றதன் காரணமாக இந்திய கடற்படை வாரம் (டிசம் 4 தேதி முதல் ஒருவார காலம்) கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 9 பதங்களுடன் 2வது இடம் பிடித்ததுள்ளது.
ஜெருசலேம் புனித யாத்திரை உதவித்தொகை ரூ.37 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
பார்சிலோனா வீரர் லயோனல் மெஸ்ஸி கால்பந்து போட்டியில் ஒரே கிளப் அணிக்காக அதிக கோல் (643 கோல்கள்) அடித்து கால்பந்து நட்சத்திர வீரர் பீலேவின் சாதனையை சமன் செய்யதார்.
தற்காப்பு கலைகளான “கட்கா, களரிப்பயட்டு, தங்டா, மல்லர்கம்பர்” ஆகிய விளையாட்டுகளை 2021 “கேலா இந்தியா விளையாட்டு” போட்டியில் சேர்க்க மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Related Links

Leave a Comment