+2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிய நிலையில், மாணவர்கள் இதுவரை எந்த அளவிற்கு அறிவுத்திறன் அடைந்துள்ளன என்பதை அறியும் வகையில்ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு“எமிஸ்” தளம் மூலம் மேற்கொள்ளப்பட்ட உள்ளது.
மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ரூ. 19.26 கோடியில் படப்பை பகுதியில் அமைக்கப்பட உள்ள நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
கரோனோ காலத்தில் அத்தியாவசிய பொருள்களை அதிகளவு அனுப்பி சிறந்த சேவையாற்றியதற்காக“ஸ்கோச்” விருதில் (SKOCH) தெற்கு இரயில்வேக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
தெற்கு இரயில்வே தலையிடம் சென்னை
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருள்களை அதிகளவு அனுப்பியது.
சானிடைசர், மாஸ்க் தயாரித்து வழங்கியது.
507 ஷராமிக் இரயில்களை புலம் பெயர்ந்து வட மாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்க செல்ல இயக்கியது.
அதிகமான ஐசோலேசன் பெட்டிகளை வழங்கியுள்ளது.
இன்று (ஐன.23) ஜீரண மண்டல நலன் குறித்தசர்வேதச இணைய வழி மாநாடு நடைபெறுகிறது
அமெரிக்க ஜீரண மண்டல அமைப்புடன் சென்னை மெடிந்தியா மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளன.
இம்மாநாட்டில் ஜப்பான், பிரேசில், இலங்கை, வளைகுடா நாடுகள், வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மருத்துவர் கலந்துகொள்ள உள்ளனர்.
குடல்-இரப்பை சிகிச்சை முறைகளில் தற்போதுள்ள தொழில்நுட்பம் மற்றும் புதிய மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளிட்வற்றை குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளன.
வட கர்நாடகம் குடமட்டா தாலுகாவில் ஹொலவள்ளி கிராமத்தில்அரியவகை பறக்கும் ஓணான் லோகேஷ் என்பவரின் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அரியவகை ஓணான் மேற்கு தொடரச்சி மலை, தெற்கு ஆசியாவில் மட்டுமே உள்ளது.
இதற்கு முன்னங்காலில் இருந்து பின்னங்கால் வலரை முறம் போல் இறக்கை உள்ளது.
நீண்ட வால், சிறிய கால்கள் உள்ளன.
பறவைகள் போல இறக்கையை அடிக்காமல் பறக்கிறது.
இடத்திற்கு ஏற்றாற்போல தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும்.
ஆண்டுதோறும் பிப்.21-ல்திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் மாநிலங்கள் உதயமான தினம் கொண்டாடப்பட்டப்படுகிறது.
திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் 1971-ல் ஜனவரி 21-ல் தனித்தனி மாநிலங்களாக உதயமாகின.
ஜன.22-ல் மேகலயா முதல்வர் கோன்ராட் சங்மா (Conrad Sangama) அம்மாநிலத்தின் தரியா கிராமத்தில் இந்தியாவின் மிக நீளமான எஃகு வளைவு பாலத்தினை (India’s Longest Steel Arch Bridge) திறந்து வைத்தார்.
அஸ்ஸாம் தேஜ்பூர் விமானப்படைத்தளம் நாட்டின் கிழக்கு பகுதியிலிருந்து வரும் எவ்வித சவால்களையும் எதிர்கொள்ள தயாராகவும், முழு பலத்துடன் உள்ளது என அந்த விமானப்படை தளத்தின் புதிய அதிகாரி தர்மேந்திர சிங் கூறியுள்ளார்.
தர்மேந்திர சிங் ஜன.21-ல் தேஜ்பூர் விமானதளத்தின் புதிய அதிகாரியாக (AOC) பொறுப்பேற்றார்.
1,68,606 வீடுகள்பிரதமரின் நகர்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இன்று (ஜன.23) அஸ்ஸாமில் பிரதமர் மோடி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு இலவச நில பட்டா வழங்கும் சிறப்பு திட்ட தொடக்க விழாவினை தொடங்கி வைக்கிறார்.
ஜன.22 முதல் ஐக்கிய நாடு சபையின் பொதுச் சபையால் ஏற்றுக் கொள்ப்பட்ட அணு ஆயதத் தடை தொடர்பான ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
அணு ஆயுதங்களை தடை செய்யும் முதல் சர்வதேச ஒப்பந்தம் ஆகும்.
2017-ல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் இவ் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
86 நாடுகள் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
52 நாடுகள் இவ்வொப்பந்தத்தை அங்கீகர்த்துள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் இவ்வொப்பந்தத்தை ஆதரிக்கவில்லை.
தெலுங்கானா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளியரான வினய் ரெட்டி அமெரிக்க அதிபரான ஜோபைடனின் பதவியேற்பு உரையை தயாரித்து அளித்துள்ளார்.
அன்டோனியா குட்டெரெஸ்ஐ.நா. அமைப்பின் பொதுச்செயலாரக இரண்டாவது முறை வகிக்க சீனா ஆதரவு அளித்துள்ளது.
ஜன.23 – முதல் தேசிய வலிமை தினம் (பராக்கிர திவாஸ் தினம்)