TNPSC Current Affairs in Tamil – 29th January 2021 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 29th January 2021

ஜன.27-ல் தமிழகம் உள்பட 18 மாநிலங்களுக்கு ரூ.12,351.5 கோடியை மத்திய நிதி அமைச்சகம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை மானியமாக விடுவித்துள்ளது.

  • ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கிராமம், தாலுகா, மாவட்டம் என மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு மானியங்களை அளிக்க நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
  • மொத்த ஒதுக்கீட்டில் அடிப்படை மானியம் 50%, வரையறுக்கப்பட்ட மானியம் 50% என இரண்டு விதமாக மத்திய அரசு வழங்குகிறது.
  • 2020-21-ம் ஆண்டில் இரண்டாவது தடவையாக ஒதுக்கப்பட்டுள்ள மானியத் தொகைகள் மாநில வாரியாக
    • தமிழகம் – ரூ.1,803 கோடி
    • ஆந்திரா – ரூ.3,137 கோடி
    • மகாராஷ்டிரா – ரூ.4,370 கோடி
    • உத்திரபிரதேசம் – ரூ.7,314 கோடி
48 நாட்களுக்கு யானைகள் புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் தேக்கம்பட்டியில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • இந்து சமய அறநிலைத்துறை சார்பாக ஆண்டுதோறும் கோவில் & மடங்களில் உள்ள யானைகளின் நலவாழ்வு கருதியும், முறையாக பராமரிக்கவும், புத்துணர்வு அளிக்கவும் இம் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை (பிப்.24) அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

21%க்கும் குறைவான முன்களப்பணியாளர்கள் மட்டுமே தமிழ்நாடு, டெல்லி, ஜார்கண்ட், உத்திரகாண்டி, சட்டீஸ்கர், மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்தார்.
ஜன.28-ல் பல்லவர்கால சிலை காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரேமரூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
500 ஆண்டுகள் பழமையான குதிரை வீரன் & போர் வீரனின் நடுகற்கள் விருதுநகர் அருகே உள்ள மூளிப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜன.22 முதல் 23 வரை நடைபெற்ற தேசிய கூட்டுறவு வங்கியின் (National Cooperative Bank) உச்சி மாநாட்டில் ரெப்கோ வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.இஸபெல்லாவுக்கு “ஆண்டின் சிறந்த பெண் தலைவர் விருது” (“Best Female Leader of the Year Award”) வழங்கப்பட்டது.

  • ரெப்கோ வங்கிக்கு “சிறந்த இலக்க முறை வங்கி”, ” சிறந்த மோசடிகட்டுப்பாட்டு முயற்சி” ஆகிய விருதுகளுகம் கிடைத்துள்ளது
  • 1969-ல் பர்மா, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்வுக்காக ரெப்கோ வங்கி துவக்கப்பட்டது.
குடியரசுத்தலைவரின் உயரிய விருதான பரம் விஷிஷ்ட் சேவா விருது (Param Vishisht Seva Award) இந்தியக் கடலோர காவல்படை இயக்குநர் நடராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • இவ்விருதினை கடலோர காவல்படையின் இயக்குநர் பெறுவது முதன்முறையாகும்.
சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கார் விருதிற்கான பொதுப்பிரிவு போட்டியில் இடம் பிடித்துள்ளது.

  • கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிமாக பார்க்கப்பட்ட தமிழ்ப்படம் என்ற சாதனையை படைத்தது.
தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு இ-கியாஸ்க் (E-kiosk) தானியங்கி இயந்திர மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹி என தெரிவித்துள்ளார்.

  • இந்த இயந்திரம் ஓவ்வாரு மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவகலத்தில் நிறுவப்படும் என அறிவித்துள்ளார்.
  • இதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தாலோ (or) சிதைந்து விட்டாலோ இங்கு அச்சிட்டுக் கொள்ளலாம்.
  • புதிய வாக்காளர் அடையாள அட்டைகளும் அச்சிட்டுக்கு கொள்ளலாம்.
ஜன.25-ல் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையின் 13வது தவணை தொகையாக ரூ.6,000 கோடியை ஓதுக்கீடு செய்துள்ளது.

  • இதில் தமிழகத்திற்கு ரூ.339.70 கோடியும், புதுச்சேரிக்கு 39.40 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்களுக்கான மோட்டார்கள் மற்றும் உதரிபாகங்கள் வாங்குவதற்கான டெண்டர் இறுதியானதால் 44 அதிநவீன வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பதற்கான பணிகள் சென்னை ஐசிஎப் உள்பட 3 இடங்களில் விரைவில் தொடங்கவுள்ளன.

  • இதன் படி சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் இரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்)-24., ஆர்சிஎப்-10, எம்சிஎப்-10 என 44 அதிநவின ரயில்கள் தயாரிக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • சென்னை பெரம்பூர் ஐசிஎப்-ல் முதல் முறையாக ரூ.97கோடியில்  உள்நாட்டு தொழில் நுட்பத்தில் அதிநவீன “ரயில் 18” விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது.
  • மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த இரயிலுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) என பெயரிடப்பட்டு புதுதில்லி-வாரணாசி இடையே இயக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் சின்னமனூரில் 10-ம் நூற்றாண்டை சார்ந்த தவ்வை என்ற மூத்ததேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடும் கட்டுப்பாடு காரணமாக டிக்-டாக் செயலி தனது சேவையை இந்தியாவில் முழுமையாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இந்திய, வங்கதேச மாணவர்கள் ஸ்பேஸ் கிட்ஸ் (Space Kids) வழிகாட்டுதலுடன் தயாரிக்கும் செயற்கைகோளுக்கு “வங்கம்-பாரத் மாணவர் செயற்கைக்கோள்” (Bengal-Bharat Student Satellite) என பெயரிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் ஆந்திரம், கர்நாடகா, பஞ்சாப், பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்பட 15 மாநிலங்களில் 9 திட்டங்கள் ரூ.54,675 கோடி மதிப்பில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • இதில் மத்திய இரயில்வே, சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சார்பில் தலா 3 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • மின்சார அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் துறை ஆகியவை சார்பில் தலா ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் உள்பட தென் மாநிலங்களுக்கான தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீப்பாயத்தின் சென்னை கிளையை திறந்து வைத்தார்.

  • நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு சமரச தீர்வு காண கம்பெனிகள் சட்டம் – 2013 பிரகாரம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் (National Company Law Tribunal (NCLT) நாடு முழுவதும் 2016-ல் தொடங்கப்பட்டன.
  • இதன் 16 அமர்வுகள் சென்னை உள்படபல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் பவர் பைனான்ஸ் (Power Accounting)  மற்றும் ரூரல் எலக்ட்ரிபிகேஷன் நிறுவனம் (Rural Electrification Company) தமிழக மின்சார வாரியத்திற்கு ரூ.11,000 கோடி கடன் வழங்கியுள்ளன.
ஜன.31-ல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

  • 43,000 முகாங்களின் மூலம் 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.
இன்று முதல் (ஜன.29) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரத்தலைவர் உரையுடன் தொடங்குகிறது.

  • கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15 வரை நடைபெறுகிறது.
  • இரண்டாம் அமர்வு மார்ச்-8 முதல் ஏப்ரல்-8 வரை நடைபெறுகிறது.
  • பிப்.1-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
எப்-15 இஎக்ஸ் (F-15 EX) ரக போர் விமானத்தை இந்தியாவிற்கு விற்க அமெரிக்க அனுமதி அளித்துள்ளது.

ஸ்வீடன் நாட்டின் க்ரீபன் (Greiben), பிரான்சின் ரபேல் போர் விமானங்களை போல் எப்-15 இஎக்ஸ் நவீன போர் விமானத்தை போயிங் நிறுவனம் (Boeing Company) வடிவமைத்துள்ளது

ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஸெனகா (Oxford-AstraZeneca) உருவாக்கியுள்ள கரோனோ தடுப்பூசியை ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பாக அந்த அமைப்புடன் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தையிலிருந்து பிரிட்டன் அஸ்ட்ராஸெனகா விலகியது.
இந்திய சீன உறவை மேம்படுத்த 8 அம்ச கோரிக்கைகளை 13வது அகில இந்திய மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அந்தோணி பிளிங்கன் (Anthony Blingen) அமெரிக்காவின் 71வது வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஃப்எம்எஸ்சிஐ தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப்பில் (FMSCI National Racing Championship) உத்திரகண்ட் வீராங்கனை அனுஷ்ரியா குலாட்டி (Anushriya Gulati), எல்ஜிபி-4 மற்றும் மகளிர் பிரிவு இரண்டிலும் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தியாஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக ஜோபைடன் அதரவு அளித்துள்ளார்.

ஏற்கனவே ஜார்ஜ் டயிள்யூ புஷ், பராக் ஒபாமா, டொன்ல்டு ட்ரம்ப் இதே கருத்தினை வலியுறுத்தியுள்ளனர்.

ஜன.28-ல் இலங்கைக்கு இந்தியா இலவசமாக வழங்கிய 5லட்சம் கரோனா தடுப்பூசிகளை அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபட்சே பெற்றுக் கொண்டார்.
ஜன.25-ல் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற 18வது தேசிய ஃபெடரேஷன் கோப்பைக்கான (National Federation Cup) ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி(Junior Athletics Championship)-யில் 100 மீ மகளிருக்கான 20 வயதிற்குட்பட்டோர் ஸ்பிரின்ட் பந்தயத்தில் (In sprint racing) தில்லியின் தரன்ஜீத் கெளர் வெற்றி பெற்றார்.
2022 ஜனவரி 20 முதல் பிப்ரவரி 6 வரை இந்தியாவில் மகளிருக்கான ஆசிய கால்பந்து போட்டி நடைபெற உள்ளதாக ஆசிய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும் 2022-ல் 17வயதிற்குட்பட்ட மகளிருக்கான ஃபிஃபா உலககோப்பை போட்டியையும் நடத்த உள்ளது

  • ஏற்கனவே 2016-ல் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து போட்டியையும்,
  • 2012-ல் 17வயதிற்குட்பட்டோருக்கான உலககோப்பை கால்பந்து போட்டியையும் இந்தியா நடத்தியுள்ளது
ஜன.25-ல் மா.கேசவன் எழுதிய “வரலாறு மிக்க கருங்குழி” நூல் வெளியீட்டு விழா மதுராந்தகம் வருவாய் கோட்டாசியர் அலுவலகத்தில் நடந்தது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயில் வெளியிட அதனை மதுராந்தகத்தின் கோட்டாசியர் சி.லட்சுமி பிரியா பெற்றுக்கொண்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரை கதாபாத்திரத்தில் நடித்த பழம்பெரும் திரைப்பட நடிகர் சி.ஆர். பார்த்திபன் (90) காலமானார்.
இந்திய செய்தித்தாள் தினம் (ஜன.29)
இந்திய விளம்பர தினம் (ஜன.29)

27th-28th 25th January Current Affairs – Read Here

Related Links

Leave a Comment