TNPSC Current Affairs in Tamil – 31st December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 31st December 2020

 

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலப் பிரிவில் தமிழக அரசுக்கு “டிஜிட்டல் இந்தியா 2020” தங்க விருதினை குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் வழங்கினார்.
தமிழக மருத்துவர் ஜெயபால் இந்திய மருத்துவ சங்கத்தின் (Indian Medical Association) தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனால் லே-பகுதியில் 3500மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிகவும் உயரமான வானிலை மையம் திறந்து வைக்கப்பட்டது.
நிரஞ்சன் பனோத்கர் யெஸ் வங்கியின் (YES Bank) தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

  • வங்கியின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரியாக அனுராக் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது
பிரிட்டன் அரசு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கரோனோ தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

  • முதன் முதலில் பிரிட்டன் அரசு பைசர் நிறுவன தடுப்பூசிக்கு அங்கிகாரம் அளித்திருந்தது.
மத்திய அமைச்சரவை ஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.7,725 கோடி மதீப்பீட்டில் சென்னை-பெங்களூரு தொழில் வழித்தட (சிபிஐசி) திட்டத்தின் கீழ் ஆந்திராவின் கிருஷ்ணாபட்டணம், கர்நாடகாவின் துமகுருவில் தொழில் முனையம், நொய்டாவில் மல்டி லாஜிஸ்டிக் மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
மத்திய அமைச்சரவை எஸ்தோனியா, பராகுவே, டொமினிக் குடியரசு நாடுகளில் ஒப்புதல் இந்திய தூதரகம் அமைக்க அளித்துள்ளது.
எச்டிஎஃப்சி வங்கியின் தற்போதைய தலைவர் சியமாளா கோபிநாத்தின் பதவிகாலம் முடிவடையும் நிலையில் அடுத்த தலைவராக பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் முன்னாள் செயலர் அதானு சக்கரவர்த்தி பெயரை ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.
டிசம்.29-ல் பிரதமர் மோடி உத்திரபிரதேச நியூபாபுர் முதல் நியூ குர்ஜா வரையிலான  (351கிமீ) சரக்கு ரயில் சேவைக்கு தனி வழித்தடத்தினை தொடங்கி வைத்தார்.

  • யாக்ராஜ்ஜில் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு போக்குவரத்தின் கட்டுபாட்டு மையத்தையும் தொடங்கி வைத்தார்.
கோவா மாநிலத்தின் தடை செய்யப்பட்ட கஞ்சா செடியினை இனி மருத்து பயன்பாட்டிற்கு மட்டும் பயிரிடலாம் என அம்மாநில சட்டத்துறை சட்ட ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது
போக்குவரத்து வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருந்தால் வாகனத்தை புதுபிக்க காலாவதி சான்று தேவையில்லை என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
2021 ஏப்ரல் 1 முதல் கார் ஓட்டுனர் இருக்கை மட்டுமல்லாமல் முன்சீட்டினிலும் ஏர்பேக் வைக்கப்படுவது கட்டாயமாக்க பொருத்தப்பட வேண்டும் என மத்திய போக்குவரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சீனாவின் ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து லாங்மார்ச்-4சி ராக்கெட் உதவியுடன் யோகன் வெய்க்சிங்33ஆர் (Yohan Weixing 33R) தொலையுணர்வு செயற்கைகோளை விண்ணில் சீனா ஏவியது.
இந்தியாவில் அமேசான் நிறுவனம் 2019-20 நிதியாண்டில் ரூ.11,400 கோடியை முதலீடு செய்துள்ளது.

Related Links

Leave a Comment