TNPSC Current Affairs in Tamil – 3rd & 4th January 2021 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 3rd & 4th January 2021

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய வீரயுகநாயகன் வேள்பாரி நூல் மலேசியாவின் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் சார்பில் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஐதரபாத் மருத்துவர் ரகுராமிற்கு மார்பாக புற்றுநோய் சிகிச்சையில் சிறந்த சேவை புரிந்தற்காக இங்கிலாந்து அரச பரம்பரையின் உயரிய “ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர் விருது வழங்கப்பட உள்ளது.




சீரம் இந்தியா நிறுவனம் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் குழந்தைகளுக்கான நிமோனியா தடுப்பூசியான “நிமோசில்” (PNEUMOSIL) என்ற தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒடிசா சம்பல்பூர் பகுதியில் நடைபெற்ற இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு (ஐஐஎம்) அமைக்கப்பட உள்ள கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் தற்சார்பு இலக்கினை அடைய புதுமை, ஒருமைப்பாடு, ஒருங்கிணைத்தல் ஆகியன முக்கிய வழியென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகத் தலைவர்களிடையே பிரதமர் மோடிக்கு மக்களிடம் செல்வாக்கு 55% பெற்றதன் மூலம் உலகளவில் அதிக மக்களின் அங்கீகாரம் பெற்று சாதனை படைத்துள்ளதாக அமெரிக்கா நிறுவனமான, மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ 2021-ல் எஸ்எஸ்எல்வி, ஆதித்யா எல்-1 உள்பட 20 செயற்கைக்கோளையும் சந்திரயான்-3, சுகன்யான் ஆகிய விண்கலன்களையும் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.
ஜன.4-ல் சஞ்சீப் பானர்ஜி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

  • பதவியேற்பின் போது “தமிழ்நாடு இன்று முதல் என் மாநிலம்; நான் அதன் சேவகன்” என்று கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் 2-வது தலைமை நீதியபதியாகய பணியாற்றிய வினீத் கோத்தாரி குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
முகமது ரஃபிக் மத்திய பிரதேச உயர்நீதிமனறத்தின் 26-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

  • ஆளுநர் – ஆனந்திபென் படேல்
பங்கஜ் மித்தல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

அலாகாபாத் —> ஜம்மு-காஷ்மீர்

  • துணைநிலை ஆளுநர் (ஜம்மு-காஷ்மீர்) – மனோஜ் சின்ஹா
  • துணைநிலை ஆளுநர் (லடாக்) – R. K. மாத்தூர்
கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இந்திய இரயில்வேயில் 2020-ல் ரூ.39 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

2020-ல் பயணிகளால் கிடைக்கும் வருமானம் 84% சரிந்துள்ளது.




ஜன.03 டெல்லியில் தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பரப்பும் விதமாக தமிழ் அகாதெமியை தில்லி அரசு அமைத்துள்ளது.

  • தலைவர் – மணீஷ் சிசோடியா (தில்லி துணை முதல்வர்)
  • துணைத்தலைவர் – என்.ராஜா (தில்லி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்
ஜன.3-ல் வேலுநாச்சியாரின் 291-வது பிறந்ந தினம் கொண்டாடப்பட்டது.
ஜன.5-ல் ரூ.3000 கோடி செலவில் 450கி.மீ தொலைவிலான கொச்சி – மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டதினை தொடங்கி வைக்கிறார்.
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிறந்த வீடு கட்டுமான விருது ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் 65 வயது முதியவரான அப்துல் லத்திப் கனய்க்கு வழங்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங் (86) காலமானார்.
திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான இளவேனில் காலமானர்.
உலக பிரெய்லி தினம் (ஜன.4)

2nd January Current Affairs – Read Here

Related Links

Leave a Comment