TNPSC Current Affairs in Tamil – 3rd December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 3rd December 2020

சென்னை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு பாதுகாப்பு அம்சங்களை சிறப்பான முறையில் கடைபிடித்தற்காக உலக பாதுகாப்பு அமைப்பு சார்பில் சர்வதேச விருது வழங்கப்பட்டது
கல், மண் ஆகியவற்றை நிலாவிலிருந்து எடுத்து வருவதற்காக சீனா ஏவிய சாங்கி-5 ஆய்வுக்கலம் டிசம்.2-ல் வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கியது.
“எக்ஸ்பி 100” என்ற பெயரில் மிகச்சிறந்த பிரீமியம் பெட்ரோலை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
புதுச்சேரி அரசின் சார்பில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு பார்த்திபனின் “ஒத்த செருப்பு” “சங்கரதாஸ் சுவாமிகள்” விருதினை பெறுகிறது.
லெக்டினெணட் ஜெனரல் ராஜீவ் சவுத்திரி எல்லையோர சாலைகளின் 27வது தலைமை இயக்குநராக டிசம்.1-ல் பொறுப்பேற்றார்.
பைசர் தடுப்பூசியை உலக அளவில் அனுமதித்த முதல் நாடு இங்கிலாந்து.
ரூ.200கோடி மதிப்பிலான பங்கு பத்திரங்களை மும்பை பங்குச் சந்தையில் லக்னோ மாநகராட்சி டிசம்.2-ல் வெளியிட்டது.
உலக சுகாதார அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட உலக மலேரியா அறிக்கை-2020ன் படி கடந்த 19 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மலேரியா நோயை பெருமளவு குறைத்த நாடாக இந்தியா உள்ளது
மகராஷ்டிராவின் புனேவில் “குழந்தைகளுக்கான நட்பான காவல் நிலையம்” அமைக்கப்பட்டுள்ளது.
இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இந்தியாவின் முதல் உடலுறுப்பு தான நினைவு சின்னம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் கியூஎஸ் ஆசியா பல்கலைக்கழக தரவரிசை 2020-ல் முதலிடம் பிடித்துள்ளது. இதில் இந்தியாவின்

  • 37வது இடத்தில் ஐஐடி – மும்பை
  • 47வது இடத்தில் ஐஐடி – டெல்லி
  • 50வது இடத்தில் ஐஐடி – மெட்ராஸ் பிடித்துள்ளன
இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி ஒருநாள் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்து சாதனை படைத்தார்.
குருநானக் ஜெயந்தி முன்னிட்டு “சீக்கியர்கள் உடன் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் சிறப்பு உறவு” என்ற நூலை அவுட்ரீச் கம்யூனிகேஷன் பணியகம் வெளியிட்டுள்ளது.
தொண்டை மண்டல ஆதீன 232-வது மடாதிபதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முக்கி அடைந்தார்.
தேசிய மாசுக் கட்டுபாட்டு தினம் (டிசம்-2)
மாற்றுத்திறனாளிகள் தினம் (டிசம்-3)

Related Links

Leave a Comment