TNPSC Current Affairs in Tamil: 03-10-2020
தேசிய நிகழ்வுகள்
- “வன உயிரின பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில்” ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதி வரை வன உயிரின வார விழா கடைபிடிக்கப்படுகிறது.
- “செயற்கை நுண்ணறிவு மேம்பாடு தொடர்பான உச்சிமாநாட்டை” அக்.5 முதல் 9-ம் தேதி வரை நடத்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
- அறிவியல் மற்றும் தொழில்நுடபத்துறை சார்பில் நடைபெறும் “வைபவ் என்னும் கல்வி மேம்பாடு தொடர்பான உச்சிமாநாடு” அக்.2 தொடங்கி அக்.30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- “10 ஆயிரம் அடி உயரத்தில் 9.02 கிலோமீட்டர்” நீளத்தில் அமைக்கபட்டுள்ள உலகின் மிக நீண்ட சுரங்க நெடுங்சாலையான அடல் சுரங்க பாதையை பிரதமர் நரேந்திர மோடி 3-ம் தேதி திறந்து வைக்கிறார்
- சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருள்களை ஏற்றிக்கொண்டு “கல்பனா சால்வா” விண்கலத்தை விண்ணில் செலுத்தும் திட்டத்தை “அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம்” தற்காலிகமாக நிறத்தி வைத்துள்ளது.
- நாட்டின் அனைத்து அரசுப்பள்ளிகளில் தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையிலான 100 நாள் பிரச்சாரத்தை நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் துவக்கி வைத்துள்ளார்.
- அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் 6.5 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நாட்டின் ஏற்றுமதில் நடப்பாண்டு செப்டம்பரில் 5.27% வளர்ச்சி கண்டு ரூ.2,740 கோடி டாலரை எட்டிள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏற்றுமதி 2,602 காேடி டாலராக காணப்பட்பட்டது. இறக்குமதி சென்ற செப்டம்பரில் 19.6% குறைந்து 3,031 கோடி டாலரானது.
- பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி சென்ற செப்டம்பரில் 31.6% அதிகரிப்பைக் கண்டுள்ளது.
தூய்மை இந்தியா 2020 அரசு விருதுகள்
- மாநில பிரிவில் குஜராத் மாநிலம் முதல் பரிசைப் பெற்றது
- சிறந்த மாவட்டப் பிரிவில் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் பெற்றது.
- மத்திய பிரதேச மாநிலம் உஜ்யன், காசோர்டு பகுதி சிறந்த வட்டத்துக்கான பரிசை பெற்றது
- சேலம் மாவட்டம் சின்னாவூர் சிறந்த கிராம பஞ்சாயத்துக்கான தூய்மை சுந்தர் சமுதாயிக் சவுசால்யா இயக்கத்தை கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 30-ம் தேதிவரை முன்னெடுத்தற்காக வழங்கப்பட்டது.
2020-ம் ஆண்டு ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை சமுதாயிக் சவுசால் அபியான் இயக்கத்துக்கான முன்னணி விருதுகள்
- மாநிலங்கள் பிரிவில் உத்திரப்பிரதேசம் (GKRA) மற்றம் குஜராத் (GKRA அல்லாத) மாநிலங்களுக்கு.
- பிரக்யாராஜ் (GKRA) மற்றும் பேர்லி (GKRA அல்லாத) மாவட்டங்களுக்கு மாவட்டங்கள் பிரிவிலும், போரிகான், போங்கைகான், அசாம்-க்கு சிறந்த கிராம பஞ்சாயத்து பிரிவிலும் வழங்கப்பட்டது.
கரானா தொற்று, பொதுமுடக்கம் ஆகிய பிரச்சனைகளால் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள உத்திரபிரேதசமும், ஆந்திரமும் கூடுதலாக ரூ.7,106 கோடி கடன் வாங்கிக் கொள்ள மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது
- “ஒரே நாடு – ஒரே குடும்ப அட்டை” திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய 6வது மாநிலமாக உத்திரப்பிரதேசம் உள்ளது. இதன் மூலம் இந்த மாநிலம் அரசு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.4,581 கோடி திரட்டிக் கொள்ள தகுதி பெறுகிறது.
- “தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை” வெற்றிகரமாக செயல்படுத்திய முதல் மாநிலமாக ஆந்திரம் உள்ளது. இதன் மூலம் அந்த மாநிலம் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.2,525 கோடி திரட்ட அனுமதிக்கப்படுகிறது
More Current Affairs – More Info
சமீபத்திய வேலைகள்