TNPSC Current Affairs in Tamil – 5th December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 5th December 2020

ரூ.1,295 கோடி மதிப்பீட்டிலான மதுரை மாநகராட்சி மக்களின் குடிநீர் சேவைக்கான முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு முன்னாள் பிரதமர் I.K.குஜ்ரால் நினைவு தபால் தலையை வெளியிட்டார்.
டிசம்.6 முதல் 10 வரை “பாரதி உலா – 2020” நிகழ்ச்சி இணைய வழியில் நடைபெறுகிறது.
இசைக்கவி ரமணனுக்கு ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் நடைபெற உள்ள பாரதி திருவிழவில் “பாரதி விருது” வழங்கப்பட உள்ளது.
நீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த மெய்நிகர் மாநாட்டின் 7வது பதிப்பு டிசம்.2 முதல் 4 வரை நடைபெற்றது

  • யுனிசெஃப், தேசிய ஊரக வளர்ச்சி & பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் ஆகியவை தெலுங்கானா, ஆந்திரா & கர்நாடகா மாநில அரசுகளுடன் சேர்ந்து ஏற்பாடு செய்தது
  • முதல் விருந்தினர் – ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன்

மையக்கருத்து:- சுகாதாரம் கவனிக்கப்படதக்கதது (Hygine matters)

பிரபல விஞ்ஞானி விருது – 2020 திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டை விஞ்ஞானி சிவகுமாருக்கு தில்லியில் வழங்கப்பட்டது.
கரோனா மேலாண்மைக்கான விருதினை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவர் ஜி.சுபாஷ் சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
உழவர்களுக்கும், வேளாண்மை அலுவலர்களுக்கு உள்ள தொடர்பை வலுப்படுத்தவும், உழவர்களுக்கு மானிய திட்டங்கள் சென்றடைய தூத்துக்குடி மாவட்டத்தில் உழவர்-அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நிகழ்நேரப் பெருந்திரள் தீர்வுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்ற வசதியை (RTGS)  வாரத்தின் அனைத்து நாட்களிலும் அல்லது 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்யுமாறு அமைத்துள்ளது.
ஹயபூசா-2 விண்கலமானது ரைகு என்ற குறுங்கோளிலிருந்து எடுக்கப்பட்ட அரிதான மாதிரிகளுடன் தெற்கு ஆஸ்திரேலியாவில் தரையிறங்க உள்ளது.
லட்சத்தீவு நிர்வாகி தினேஷ்வர் சர்மா (66) காலமானார்.
உலக தன்னார்வ தினம் (டிசம்-5)

Related Links

Leave a Comment