TNPSC Current Affairs in Tamil – 9th December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 9th December 2020

 

தமிழக சட்டப்பேரவையில் வ.உசி., ஓமந்தூரார், பரமசிவம் சுப்பராயன் ஆகிய மூன்று தலைவர்களின் உருவப்படங்களை திறக்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்பால் சட்டப்பேரவையை அலங்கரிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு.
தமிழ் வழி பயின்றவர்களுக்கு அரசுப்பணியில் 20% ஒதுக்கீடு சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் ஆளுநர் அளித்த நிலையில் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 63.41 லட்சமாக உள்ளதென தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறை மற்றும் இந்திய செல்போன் நிறுவன சங்கங்கள் இணைந்து நடத்தும் “இந்திய மொபைல் மாநாடு 2020”  (India Mobile Congress) டிசம். 8 முதல் 10 வரை நடைபெறுகிது.

மையக்கருத்து:- உள்ளடக்கிய புத்தாக்கம் – திறன்மிகு பாதுகாப்பபான மற்றும் நிலையானது (Inclusive Innovation – Smart, Secure, Sustainable)

சீனாவும் நேபாளமும் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் என அறிவித்துள்ளன. முந்தைய அளவை விட எவரெஸ்ட் சிகரம் 0.86 மீட்டர் அதிகம்.
ஐியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 2021 இறுதிக்குள் ஜியோ 5ஜி சேவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ரூ.22 கோடியை (30லட்சம் டாலர்கள்) பாலஸ்தீனத்தின் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு இறுதி தொகையாக இந்திய அரசு பாலஸ்தீனத்திற்கு வழங்கியுள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கியானது பெங்களூர் ஸ்மார்ட் எரிசகத்தி திறமையான மின் விநியோக திட்டத்திற்காக 190மில்லியன் டாலர் கடன் வழங்க டிசம்.4 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் முதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி  செலுத்தப்படும் என மத்திய சகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் “இன்வெஸ்ட் இந்தியா” (Inverst India) அமைப்பிற்கு ஐ.நா. வர்த்தக வளர்ச்சி மாநாடு அமைப்பின் “ஐநா மூதலீட்டு மேம்பாட்டு விருது 2020” (United Nations Investment Promotion Award) வழங்கப்பட்டுள்து.
உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் குவாலியர், ஓர்ச்சா ஆகிய நகரங்களை யுனெஸ்கோ சேர்த்துள்ளதாக மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (United Nations Commission on Narcotic Drugs (UN-CND) 63-வது அமர்வானது கஞ்சாவை மிகவும் ஆபத்தான மருந்து பிரிவில் இருந்து நீக்கியுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய, மேம்பட்ட அணு இணைவு சோதனை சாதனமான HL-2M டோகாமகர் உலை (TOKAMAK REACOR) “செயற்கை சூரியன்” என அழைக்கப்படுகிறது.
பிரிட்டனில் முதல் கரோனா தடுப்பூசி 90 வயது மார்கெரட்கீனன் என்ற மூதாட்டிக்கு செலுத்தப்பட்டது.
பிரிட்டிஷ்-இந்திய பத்திரிக்கையாளர் அனிதா ஆனந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை மையமாகக் கொண்டு The Patient Assassing: A True Tale of Massacre, Revenge and the Raj என்ற பெயரில் எழுதிய புத்தகத்திற்கு ஃபென் ஹெஸ்ஸல்-டில்ட்மான் வரலாற்றிற்கான பரிசு 2020 (PEN Hessell-Tiltman Prize for Histroy 2020)-ஐ வென்றுள்ளது
பிக்சல் (PIXXEL) என்ற நிறுவனம், இந்திய விண்வெளி துறையின் கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இந்தியாவின் முதல் “தனியார் தொலையுணர்வு செயற்கைக்கோளை  (Remote-Sensing Satelite) தயாரிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்ற அரை மாராத்தான் போட்டியில் கென்ய வீரர் கிபிவோட் கன்டி போட்டிக்கான இலக்கை 57நிமிடம் 32விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.
மும்பையை சார்ந்த ஜெஹான் தாருவாலா சாகிர் கிராண்ட் பிரிக்ஸின் ஃபார்முலா-2 போட்டியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
உலக தடகள விருதுகள் 2020-க்கான (World Athletics Award – 2020) வீரர்கள் தேர்வு

  • ஆண் உலக தடகள வீரர் – துருவ வால்டர் மோண்டோ டுப்லாண்டிஸ் (ஸ்வீடன்)
  • பெண் உலக தடகள வீரர் – டிரிபிள் ஜம்பர் யூலிமர் ரோஜாஸூ (வெனிசுலா)
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (டிசம்.9)

Theme : Recover with Integrity

Related Links

Leave a Comment