ஐங்குறுநூறு
நூற்குறிப்பு
ஐங்குறுநூறு | ஐந்து + குறுமை + நூறு |
ஆசிரியர் எண்ணிக்கை | 5 |
பாடல் எண்ணிக்கை | 500 |
எல்லை | 3-6 |
பொருள் | அகம் |
தொகுத்தவர் | புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார் |
தொகுப்பித்தவர் | யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை |
கடவுள் வாழ்த்து பாடியவர் | பாரதம் பாடிய பெருந்தேவனார் |
தெய்வம் | சிவன் |
- மூன்றடிச்சிறுமையும், ஆறடிப் பெருமையும் கொண்ட அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற அகப்பொருள் நூலாகும்.
- திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக ஐந்த திணைக்கு ஐந்நூறு பாடல்கள் உள்ளளன. அவற்றுள்
திணைப்பாடல்கள் | ஆசிரியர்கள் |
குறிஞ்சி | கபிலர் |
முல்லை | பேயனார் |
மருதம் | ஒரம் போகியார் |
நெய்தல் | அம்மூவனார் |
பாலை | ஓதலாந்தையார் |
இச்செய்தியை
“மருதமே ரம்போகி நெய்த லம்மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன் – கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு”
என்னும் பாடல் உணர்த்துகின்றது.
- இந்திர விழா குறித்து இந்நூல் கூறுகிறது.
மேற்கொள்கள்
- “நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க”
- “பால்பல ஊறுக பகருபல சிறக்க”
- “பகைவர்புர் ஆர்க பார்ப்பார் ஒதுக”
- “பசியில் லாகுக பிணிசேண் நீங்குக”
- “வேந்துபைக தணிக யாண்டுபல நந்துக”
எனப் புலவர் ஓரம்போகியார் “வேட்கைப்பத்து” என்னும் தலைப்பிலுள்ள பத்துப்பாடல்களில் சிறந்த உலகியல் கருத்துகளை அமைத்துப் பாடியுள்ளார்.
- நாணிலை மன்ற பாண நீயே
கோணேர் இலங்குவளை நெகிழ்த்த
கானலந் துறைவற்குச் சொல்லுகுப் போயே
இவ்வாற செறிவுமிக்க சிறிய பாடல்களடங்கிய இந்நூலுக்கு ஒளவை ச.துரை சாமிப்பிள்ளை உரையெழுதியுள்ளார்
- “பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலந்திற் றகுகுவென் மாதே” – ஓதலாந்தையார்