Bharathidasan – பாரதிதாசன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

பாரதிதாசன் – Bharathidasan

TNPSC Tamil Notes - bharathidasan

Group 4 Exams – Details

புலவர் பாரதிதாசன்
பெற்றோர் கனகசபை- இலக்குமி அம்மையார்
காலம் 29.4.1891 – 21.4.1964
சிறப்பு பெயர் பாவேந்தர், புரட்சிக் கவிஞர்
குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, தமிழியக்கம், சேர தாண்டவம், தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், சஞ்சீவி பருவத்தின் சாரல், குறிஞ்சித்திட்டு
சாகித்திய அகாதெமி விருது பிசிராந்தையார் – நாடகநூல் (1969)

ஆசிரியர் குறிப்பு

  • பாரதிதாசன் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். பாரதியார் மீது கொண்ட காதலால் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். இவரது காலம் 29.4.1891 – 21.4.1964
  • இவரின் பெற்றோர் கனகசபை- இலக்குமி அம்மையார்.
  • பாவேந்தர், புரட்சிக் கவிஞர் என்று புகழப்படுகிறார்.
  • பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே அவர் காலத்தின் உருவானது. இவர் பிறந்த ஊர் தற்போது புதுச்சேரி என அழைக்கப்படும் பாண்டிச்சேரி.
  • பாரதிதாசன் இயற்றிய குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு ஆகியவை கவிதை நூல்கள்.
  • இவர் இயற்றிய மற்ற முக்கிய நூல்கள் இருண்ட வீடு, தமிழியக்கம், சேர தாண்டவம், தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார் (நாடகம்), சஞ்சீவி பருவத்தின் சாரல், குறிஞ்சித்திட்டு ஆகியவை ஆகும்.
  • குயிலி என்னும் பெயரில் (கதை வடிவில்) திங்களிதழை நடத்தி வந்தார்.
  • தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் பாடியுள்ளார்.
  • இவரது 1969-ல் பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கபட்டுள்ளது.
  • இவரை தமிழக அரசு கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும், சிறந்த கவிஞருக்கு “பாவேந்தர் விருது” வழங்குகிறது.
  • 1982-ல் இவரது பெயரில் திருச்சியில் “பாரதிதாசன் பல்கலைகழகத்தை” உருவாக்கியுள்ளது.
  • புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • பாரதிதாசன் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
  • தமிழ் எங்கள் ஊர் என்பதாலே எவரையும் வெல்லுந்தரமுண்டு தமிழருக்கும் புவிமேல என முழக்கமிட்டவர். தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை பெண்ணடிமை, திராவிட இயக்கச்சிந்தனை, பொதுவுடைமை முதலானவற்றைப் பாரதிதாசன் கவிதைகள் வெளிபடுத்தின.

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” என
வீழ்ச்சியும் தமிழர் எழுச்சி பெற விழைந்தார்.

“எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம்நோக்கி நடக்கின்ற திந்தவையம்
இல்லானும் அங்கில்லை பிறர்நலத்தை
எனதென்ற தனியொருவன் சொல்லான் அங்க”
எனப் பொதுவுடைமை விரும் வரேவற்கின்றார்

பாவேந்தர் பாரதிதாசன்

மெய் செல்லல் நல்லதப்பா – தம்பி
மெய் செல்லல் நல்லதப்பா……

என இளைஞர்களுக்கு உண்மையின் மகத்துவம் பற்றி பாடல் மூலம் எடுத்து இயம்புகிறார் பாரதி தாசன்

  • “புதியதோர் உலகம் செய்வோம்” “சங்கே முழங்கு” போன்றவை பாரதிதாசனின் இனியபாடல்கள் ஆகும்.
  • தமிழுக்கு தொண்டு செய்வோர் சாவதில்லை – பாரதிதாசன்

பாரதியார்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment