வாழ்நாள் சாதனையாளருக்கான கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது
சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருது – 1983, 1985
கவிஞர் சிற்பி விருது
ஆசான் விருது
இவரைப் பற்றி
சி.செல்லப்பாவின் “எழுத்து” காலம் தொட்டு எழுதியிருக்கிறார்.
தமிழில் நவீன கவிதையை முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளுள் ஒருவர்.
தந்தத்தோடு கூடிய நவீன கவிதைகளில் இவர் ஞானக்கூத்தனுக்கு முன்னோடி.
யாப்பிலிருந்து கவிதை உரைநடை நோக்கி நகர்ந்த காலப் பகுதியில் அதிகம் எழுதியவர் புது வடிவத்தை நிலைநிறுத்தம் வகையில் கோட்பாட்டுப் பின்னணியை உருவாக்க விரும்பிய பிச்சமூர்த்தி, இ.க.நா.சுப்ரமணியம், இ.செல்லப்பா ஆகியோருடன் கவிதையியல் பற்றி விவாதித்தவரும் அவர்தான்.
“யாப்பும் கவிதையும்” என்ற மணியின் நூல்தான் புதுக்கவிதை பற்றிய முதலாவது ஆய்வு நூல். யாப்பிலிருந்து விடுபட்டது தான் புதுக்கவிதை என்று நிறுவினாலும் அதில் மரபின் தொடர்ச்சியை காண முடியும் என்று ருசுப்படுத்தியவரும் அவர்தான்.
அதை வெறும் கருத்தாக்கமாக மட்டுமல்லாமல் படைப்பின் ஆதாரத்துடன் முன்வைத்தார். அவரைத் தவிர்த்த முன்னோடிகள் பலரும் உரைநடை சார்ந்த மொழியைக் கவிதைக்கு பயன்படுத்திய போது செய்யுளின் நடையை மறுவார்ப்பு செய்தவர் சி.மணி. இத்தனைக்கும் மேற்கத்திய நவீன கவிதையின் பாதிப்பு அவரிடம் அதிகம்
இவர் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றிருக்கிறார்.
இவர் எழுதிய நரகம், பச்சையம், வரும் போகும் போன்ற நீள் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.
“நடை” என்ற பெயரில் சிறுபத்திரிக்கை ஒன்றையும் நடத்தி வந்தார்.