மதுரை மாவட்டம் சின்னமனூரில் (தற்போது தேனி மாவட்டம்) பிறந்தார்
இவரது காலம் 29.09.1912 – 18.12.1998
பிறந்த ஊர் சின்னமனூர் என்பதால் சி.சு.செல்லப்பா என்ற எழுதி வந்தார்.
இவர் ஒரு எழுத்தாளர், இலக்கிய விமர்சகர்
இவர் எழுத்து என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
இவர் பல நல்ல எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தார்.
சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் “வெங்கட் சாமிநாதன், பிரமீள். ந.முத்துசாமி” மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள்.
இவர் தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் “வாடி வாசல்”, “சுதந்திர தாகம்” போன்றவற்றை எழுதினார்.
காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
சுதந்திர சங்கு இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு மணிக்கொடி இதழ் கை கொடுத்தது.
அவர் எழுதிய “சாசாவின் பொம்மை” சி.சு.செல்லப்பாவுக்கு சிறந்த எழுத்தாளர் என்ற சிறுகதை எழுத்தாளர் அந்தஸ்த்தை அளித்தது.
பத்திரிக்கைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த “எழுத்து” என்ற இதழைத் பலவித இன்னல்களுக்கிடையே தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார்.
1998-ம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மறைந்தார்
இவரது “சுதந்திர தாகம்” புதினத்திற்கு 2001-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. அவரது கவிதைகள் கவிதை தொகுப்பாக வெளிவந்தது.