Elathi – ஏலாதி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ஏலாதி

TNPSC Tamil Notes - Elathi - ஏலாதி

நூற்குறிப்பு

  • நான்கடியில் ஆறு அருங்கருத்துக்களை இந்நூல் நவில்கிறது
  • இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது
  • ஏலம் என்னும் மருந்துப் பொருளை முதன்மையாகக் கொண்டு இலவங்கம், சிறு நாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
  • இம்மருந்து உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும். அதுபோல இந்நூலின் கருத்துக்கள் கற்போரின் அறியாமையை அகற்றும்.

பாவகை

  • இந்நூல் சிறப்பாயிரம், தற்சிறப்பு பாயிரம் உட்பட எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டது.

ஆசிரியர் குறிப்பு

  • ஏலாதியை இயறறியவர் கணிமேதாவியார்.
  • இவருக்கு கணிதமேதையார் என்னும் மற்றொரு பெயருமுண்டு.
  • இவர் சமண சமயத்தவர் என்பர்.
  • இவர் ஏலாதியில் சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலிய உயரிய அறக்கருத்துகளை வலியுறுத்திக் கூறுகிறார்.
  • கணிதமேதையார் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர்.
  • கணி – சோதிடம்
  • மேதாவியார் – வல்லவர்
  • இவர் திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலை எழுதியுள்ளார்.

ஏலாதி கூறும் கருத்துக்கள்

சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது

மேவல் எளிது; அரிது மெய் போற்றல்; ஆவதன்கண்

சேறல் எளிது; நிலை அரிது; தெளியிராய்

வேறல் எளிது; அரிது சொல்

“வணங்கி வழியொழுகி மாண்டார் சொல் கொண்டு

……………………………………………………………………………………………………..

நூல் நோக்கி வாழ்வான் நுனித்து”

ஒருவன் ஒரு பிறவியில் பெற்ற ஒழுக்கமும் கல்வியுமே அவனுக்கு மறு பிறவியிலும் வந்து பயனளிக்கும் என்னும் கருத்தை  இப்பாடல் வலியுறுத்தகிறது

Old Questions

சிறுபஞ்சமூலம்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment