எட்டுத்தொகை – Ettuthogai
Group 4 Exams – Details
நூல் | ஆசிரியர் எண்ணிக்கை | பாடல் எண்ணிக்கை | எல்லை | பொருள் | தொகுத்தவர் | தொகுப்பித்தவர் | கடவுள் வாழ்த்து பாடியவர் | தெய்வம் |
நற்றிணை | 275 | 400 | 9 – 12 | அகம் | தெரியவில்லை | பன்னாட்டு தந்த பாண்டிய மாறன் வழுதி | பாரதம் பாடிய பெருந்தேவனார் | திருமால் |
குறுந்தொகை | 205 | 400 | 4 – 8 | அகம் | பூரிக்கோ | தெரியவில்லை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | முருகன் |
ஐங்குறுநூறு | 5 | 500 | 3 – 6 | அகம் | புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | யானைக்கட்டு சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
பதிற்றுப்பத்து | 8 | 80 | 8 – 57 | புறம் | தெரியவில்லை | தெரியவில்லை | —- | —- |
பரிபாடல் | 13 | 22 | 25 – 400 | புறம் | தெரியவில்லை | தெரியவில்லை | —- | —- |
கலித்தொகை | 5 | 150 | 11 – 80 | அகம் | நல்லந்துவனார் | தெரியவில்லை | நல்லந்துவனார் | சிவன் |
அகநானூறு | 145 | 400 | 13 – 31 | அகம் | உருத்திர சன்மார் | பாண்டியன் உக்கிரப் பெருவழுதி | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
புறநானூறு | 158 | 400 | 4 – 40 | புறம் | தெரியவில்லை | தெரியவில்லை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
- எட்டுத்தொகை நூல்கள் இவை இவையெனப் பழைய வெண்பா ஒன்று எடுத்துரைக்கின்றது.
- நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்த்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
இத்திறந்த எட்டுத்தொகை
- இத்தொகுப்பில் எட்டு நூல்கள் அடங்கியுள்ளன.
- இவற்றுள் ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, ஆகியன அகப்பொருள் பற்றியன
- பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறப்பொருள் பற்றியன.
- பரிபாடல் என்னும் நூல் அகப்பொருள் புறப்பொருள் இரண்டையும் சேர்த்துத் தருகிறது