இசைக்கலை – Isai Kalai

- இசை என்றும் சொல் “இயை” என்னும் வேர்சொல்லில் இருந்து தோன்றியது.
- இசையானது “கந்தருவ வேதம்” என்று அழைக்கப்படும் சிறப்பினை உடையது.
- இன்னிசை, ஒத்திசை, தொகுப்பிசை என மூன்றாகப் பிரிப்பர்.
- ஒற்றைச் சுரங்கள் இனிமையாகச் சேர்வது இன்னிசை இந்திய இசை இன்னிசை வகையைச் சேர்ந்தது.
- ஒத்த சுரங்களின் சுர அடுக்குகள் தம்மன் ஒத்திசைப்பது “ஒத்திசை” எனப்படும். மேலை நாட்ட இசை இந்த வகையைச் சார்ந்ததாகும்.
- ஒவ்வோர் சுரத்திற்கும் வேறொர் இணைச்சுரம் சேர்க்கப்பட்டு இரண்டும் ஒன்றாக இசைப்பது தொகுப்பிசை ஆகும்.
- இசையின் ஒலிக்குறிப்பு சுரம் எனப்படும்
- சுரம் என்பதற்கு இனிமை உடையது என்று பொருள்.
- இசைத்தல் என்பதற்கு பொருந்துதல், ஒன்றாதல் என்று பொருள்
- இந்தியாவில் இந்துஸ்தானி இசை, கருநாடக இசை என்ற இரு பிரிவுகள் இன்று வழக்கில் உள்ளன
சுரங்களின் பெயர்கள் வருமாறு
பழந்தமிழ் நூல்கள் |
சுரங்களின் பெயர்கள் |
சுரக்குறியீடு |
குரல் |
சட்சம் |
ச |
துத்தம் |
ரிஷபம் |
ரி |
கைக்கிளை |
காந்தாரம் |
க |
உழை |
மத்தியம் |
ம |
இளி |
பஞ்சமம் |
ப |
விளரி |
தைவதம் |
த |
தாரம் |
நிஷதம் |
நி |
- இவை ஏழு சுரங்கள் எனப்படும்
- ஏழு சுரங்களும் ஒன்றைவிட மற்றது வலியது என்ற வரிசையில் ஒலிப்பது ஆரோசை (ஆரோகணம்) ஆகும்.
- ஏழு சுரங்களையும் இறங்கு வரிசையில் ஒலிப்பத அமரோசை (அவரோகணம்) ஆகும்.
- சுரம் என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் “நரம்பு” என்பதாகும்.
- சுரங்கள் சேர்ந்தத “ராகம்” ஆகம்
- ராகம் என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் “பண்” என்பதாகும்.
- பூபாளம், முகாரி, நீலாம்பரி போன்ற பல ராகங்கள் உண்டு.
பொழுது |
பாட வேண்டிய ராகம் |
விடியல் |
கேதாரம், தன்னியாசி |
முற்பகல் |
சாவேரி, தேவமனோகரி |
நண்பகல் |
ஸ்ரீராகம், மத்தியமாவதி |
பிற்பகல் |
முகாரி, பேகடை |
மாலை |
கல்யாணி, வசந்தம் |
எல்லா நேரங்களிலும் |
பைரவி, சங்கராப்பரணம், காம்போதி, ஆரபி |
- தேவாரப் பாடல்களின் இசையைப் பகற்கண், இராப்பண், பொதுப்பண் என மூன்றாகப் பிரித்துள்ளனர்.
இசைக்கருவிகள்
- உலகில் இசைக்கப்படும் எல்லா இசைக் கருவிகளுக்கும் அடிப்படையான இசைக்கருவிகள் எல்லாம் கிழக்கு நாடுகளில் தோன்றின.
- தமிழ்நாட்டில் இசைக்கருவிகளை நான்கு வகையாகப் பிரிப்பர்
-
- தோல்கருவி
- துளைக்கருவி
- நரம்புக்கருவி
- கஞ்சக்கருவி
- கஞ்சக்கருவி என்பது உலோக கருவிகளை குறிக்கும்
- போடுவோரின் மிடற்று ஓசையும் சேர்த்து ஐந்தையும் “பஞ்சமா சத்தம்” என்பர்
தோற்கருவிகள் |
துளைக்கருவிகள் |
பேரிகை, படகம், இடுக்கை, உடுக்கை, மத்தளம், சல்லி, கரடி |
வங்கியம், கொம்பு, தாரை, குழல், காளம், சங்கு |
நரம்புக்கருவிகள் |
கஞ்சக்கருவிகள் |
யாழ், வீணை, கின்னரி |
கைமணி, தாளம், கஞ்சதாளம், கொண்டி |
- பஞ்ச மரபு என்ற பண்டைய இசைத்தமிழ் நூல் பாடகர் பாடுவது மிடற்று கருவி என்று கூறுகிறது.
- இன்று மேலைநாட்டு இசைக்கருவிகளம் பயன்படுத்தப்படுகின்றன.
- இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மாதவியைக் பற்றி கூறும்போது “நாடகம் ஏத்தும் நாடக கணிகை” என்று குறிப்பிடுகின்றார்.
- முதற்சங்கத்தில் பெருநாரை, பெருகுருகு (முதுநாரை, முதுகுருகு) என்ற நூல்கள் இருந்தன.
- பெருகுருகு என்பது துணைக்கருவிகள் பற்றிய இசை நூல்.
- இடைச்சங்கத்தில் பேரிசை, சிற்றிசை என்ற இசைநூல்கள் இருந்தன. கடைச்சங்கத்தில் இசைமரபு, இசைநுணுக்கம், ஐந்தொகை அல்லது பஞ்சமரபு என்னும் இசை நூல்கள் இருந்தன.
- தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியம், காப்பியங்கள், பதினெண்கீழ்கணக்கு நூல், நிகண்டுகள், சைவ வைணவ நூல்கள், புராணங்கள் சிற்றிலக்கியங்கள், உரைநூல்கள் என எல்லாவற்றிலும் இசைத்தமிழ் குறித்த, தமிழ் இசை குறித்த பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.
- அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்சபாரதீயம், பரதசேனாபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளவகை ஒத்து என்ற இசை இலக்கண நூல்களை குறிப்பிட்டுள்ளார்.
- ஐந்து திணைக்கும் உரிய “யாழ்” குறித்து இலக்கண நூல்கள் கூறுகின்றன.
தமிழிசை வரலாறு
- ஒவ்வொரு இனத்திற்கும் உரியதாய் ஓர் இசை மரபு இருக்கும். தமிழுக்கு உரிய இசை மரபு தமிழிசை ஆகும்.
- பரிபாடல் தூக்கு, வண்ணம் குறித்துக் கூறுகிறது. கலித்தொகையின் தாசிழிசை இசைப்பாட்டே
- பாணரும், கூத்தரும் இசைவளர்த்த கலைஞர்களே ஆவர்.
- சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை, கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவவரி, குன்றக்குரவை பகுதிகள் இசைப் பற்றியன.
- களப்பிரர் காலத்தில் காரைக்கால் அம்மையாரின் திருவண்ணத்தந்தாதி போன்ற பதிகங்கள் இசையுடன் பாடப்பட்டன.
- பல்லவர் காலத்தில் மூவர் முதலிகள் தமிழ் இசைைய நன்கு வளர்த்தனர்.
- சம்பந்தர் யாழ்முறி பதிகம் பாடினார்.
- நம்மாழ்வாரின் திருவாய்மொழி இசையை மேலும் வளர்த்தது.
- கொங்குவேள் மாக்கதையாகிய பெருங்கதை யாழிசை குறித்த பல செய்திகளைக் கூறுகிறது. உதயணன் இசைப்பாடி வென்ற சுரமஞ்சரியை மணக்கின்றான்.
- முதலாம் மகேந்திரனின் குடுமியான் மலைக் கல்வெட்டு இசைக் கல்வெட்டாகும்.
- பெரியபுராணத்தில் ஆனாயநாயணர் புராணத்தில் குழலிசை பற்றியும் திருநீலகண்ட நாயணார் புராணத்தில் யாழ்த்திறம் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
- திருவிளையாடல் புராணங்களில் அமைந்துள்ள சாதாரி பாடின திருவிளையாடல், விறகு விற்ற திருவிளையாடல் ஆகிய இசை பற்றியன.
- அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்கள் தாளக் கலைக்கு வேதமாக திகழ்கிறது.
- தமிழிசையும் ஆரிய சங்கீதமும் கலந்த கர்நாடக சங்கீதம் தோன்றியது என்பர்.
- பண்டைய தமிழிசை கருநாடக சங்கீதமாக வழங்ககிறது என்று தண்டபாணி தேசிகர் போன்றோர் கருதுகின்றனர்.
- ராகத்தை முதன்மையாகக் கொண்டது சங்கீதங்கள்
- சங்கீதத்தோடு பாட்டும் இணைந்தது சாகித்தியங்கள்.
- சீர்காழியில் பிறந்த முத்துத்தாண்டவர் (1525 – 1600), மாரிமுத்தாப்பிள்ளை (1712 – 1782) அருணாச்சலக்கவிராயர் (1711 – 1778) ஆகிய மூவரும் தமிழ் பாடி தமிழிசை வளர்த்தனர்.
- இம்மூவரையும் “தமிழ் மூவர்” என்றம் “சீர்காழி மூவர்” என்றும் “கருநாடக சங்கீத ஆதி மும்மூரத்திகள்” என்றும் போற்றுவர்.
- இம்மூவரே பல்லவி – அனுபல்லவி – சரணம் அமைப்பில் பாடும் பாடல் மரபைத் தோற்றுவித்தனர்.
- இம்மரபைப் பின் வந்த சங்கீத மும்மூரத்திகள் பின்பற்றினர்.
- நாயக்கர் காலத்தில் தியாகையர் (1767 – 1847), சியாமசாஸ்திரிகள் (1762 – 1827), முத்துசாமி தீட்சிதர் (1776 – 1835) மூவரும் கீர்த்தனைகள் பாடினர்.
- 19-ம் நூற்றாண்டில் கோபால கிருஷ்ண பாரதியார் முன்சீப் வேதநாயகம் பிள்ளை, இராமலிங்க அடிகள் போன்றோர் இசைப்பாக்களையும் கீரத்தனைகளும் இயற்றினர்.
- 20-ம் நூற்றாண்டில் ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், அண்ணாமலைச் செட்டியார் ஆகியோர் இசைத் தொண்டு புரிந்தனர்.
- ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்ற நூலை இயற்றினார். இது 1346 பக்கங்களை கொண்டது.
- அண்ணாமலை செட்டியார் தமிழிசைச் சங்கம் வைத்து தமிழிசையைக் காத்தார்.
- தண்டபாணி தேசிகர், சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் தமிழ் இசைக்குப் பாடுபட்டவர்களாவர்.
நாடகக்கலை
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related