கண்ணதாசன் – Kannadasan
Group 4 Exams – Details
புலவர் | கண்ணதாசன் |
இயற்பெயர் | முத்தையா |
பிறப்பு | சிவகங்கை மாவட்டம் – சிறுகூடல்பட்டி |
பெற்றோர் | சாத்தப்பன் – விசாலாட்சி |
சிறப்புப் பெயர் | கவியரசு |
நூல்கள் (கவிதை) | ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, கல்லக்கடி, மகாகாவியம், ஏசுகாவியம் |
விருது பெற்ற நூல் | சேரமான் காதலி (சாகித்திய அகாெதமி) |
ஆசிரியர் குறிப்பு
- சிவகங்கை மாவட்டத்தில் சிறுகூடல்பட்டியில் 24.06.1927-ல் பிறந்தார்
- இவரின் பெற்றோர் சாத்தப்பன் – விசாலாட்சி
- இவரின் இயற்பெயர் முத்தையா
- கண்ணதாசன் கவிதைகள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவர் திரைப்படப் பாடல்கள் நூல் வடிவம் பெற்றுள்ளளன.
- ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, கல்லக்கடி, மகாகாவியம், ஏசுகாவியம் முதலியன அவர் படைத்த நெடுங்கவிதைகள்
- இராசதண்டனை என்பது கம்பர் – அம்பிகாபதி வரலாற்றை வைத்து அவர் படைத்த இனிய நாடகம்.
- ஆயிரம் தீவு, அங்கயற்கண்ணி, வேலங்குடித்திருவிழா முதலான பல புதினங்களையும் கண்ணதாசன் படைத்திருக்கிறார்.
- அவர் எழுதிய இருபதுக்கு மேற்பட்ட புதினங்களில் “சேரமான் காதலி” சிறந்த வரலாற்றப் புதினமாகும். அதற்குச் சாகித்திய அகாதமியின் பரிசு கிடைத்துள்ளது.
- கண்ணதாசன் தென்றல், முல்லை, கண்ணதாசன் கடிதம், தமிழ் மலர் முதலிய இதழ்களைத் தொடங்கி அவற்றின் ஆசிரியராக இருந்து சிறந்த இதழ் பணி ஆற்றியுள்ளார்.
- கவிதையிலும், உரைநடையிலும், சொற்பொழிவிலும், திரைப்படத் துறையிலும் தமக்கென ஒரு புதிய வழியினை வகுத்துக் கொண்டு தலைநிமிர்ந்து நின்றவர் கண்ணதாசன். நான் நிரந்தமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
- அண்ணாமலையரசர் நினைவுப் பரிசையும், சாகித்ய அகாடமி பரிசையும் பெற்றுள்ளார்.
- தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்தார்.
Related Links
Group 4 Model Questions – Download