காவடிச்சிந்து – Kavadisindhu
Group 4 Exams – Details
நூல் | காவடிச்சிந்து |
ஆசிரியர் | செனனிகுளம் அண்ணாமலையார் |
நூற்குறிப்பு
- சிந்து என்பது பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று உறுப்புகளைக் கொண்ட இசைப்பாடு
- சரணத்தில் பல கண்ணிகள் இடம் பெறும்
- கண்ணிகள் மட்டுமே “சிந்து” என்று கூறப்படும்
- காவடிச்சிந்து நூல் கண்ணிகளால் அமைந்த “சிந்து” என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது ஆகும்.
- பெரும்பாலும் காவடி எடுத்தக்கொண்டு போகும்போது பாடல் பாடுவதால் காவடிச்சிந்து எனப் பெயர் பெற்றது
- காவடிச்சிந்து என்ற இலக்கிய வகையை முதன் முதலில் பாடியவர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்.
- பெற்றோர் சென்னவர் – ஓவுஅம்மாள்
- காலம் 1861 – 1890
- தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் “காவடிசிந்தின் தந்தை” எனப் போற்றப் பெற்றார்.
- திருநெல்வேலிக்கு அருகே உள்ள கழுகுமலையில் எழுந்தருளியிருக்கும் முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூல்.
- ஊற்றுமலைச் ஜமீன்தார் இருதாலய மருதப்பதேவர் கழுகுமலை முருகனுக்கு காவடியெடுத்த போது வழியில் பாடும் பொருட்டு இயற்றப்பட்ட நூல்
- இந்நூலில் 24 பாடல்கள் உள்ளன.
- பாரதி, பாரதியார், கண்ணதாசன் போன்றோர் காவடிச்சிந்து மெட்டில் பாடல்கள் புனைந்துள்ளனர்.
- இராமாயணத் திருப்புகழ்க் காவடிச்சிந்து, அரிசந்திரன் திருப்புகழ்க் காவடிச்சிந்து, தேவடிச்சிந்து, பூவடிச்சிந்து போன்ற பிற நூல்களும் உள்ளன.
- பூவடிச்சிந்து என்பது அசன்அலிப்புலவர் இயற்றிய இஸ்லாமிய நூல்
- அண்ணாமலை ரெட்டியார் வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
மேற்கோள்
புள்ளிக் கலாபமயிற் பாகன் – சக்தி வள்ளிக்கிசைந்த முருகேசன் – அண்ணா |