Kaviko – கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

கவிக்கோ – Kaviko

TNPSC Tamil Notes - Kaviko - கவிக்கோ

Group 4 Exams – Details

புலவர் கவிக்கோ அப்துல் ரகுமான்
பிறப்பு 9 நவம்பர் 1937
விருது ஆலாபனை (சாகித்ய அகாடமி விருது), பாரதிதாசன் விருது, தமிழன்னை விருது

ஆசிரியர் குறிப்பு

  • “கவிக்கோ” என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் “அப்துல் ரகுமான்” பிறப்பு நவம்பர் 9 1937
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார்
  • “வானம்பாடி” இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கியவர்.
  • எழுதுபவர்களின் தலைவாயில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
  • அவர் “பால்வீதி” என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார்.
  • அத்தொகுதி வெளிவந்தபோது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார்.
  • தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து “முனைவர்” பட்டம் பெற்றவர்.
  • தமிழில் “ஹைக்கூ, கஜல்” அகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும், பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
  • 1960-க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார்.
  • சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி, வாணியம்பாடி இஸ்லாமிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.
  • “அறிவுமதி” உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார்.
  • “ஆலாபனை” கவிதைத் தொகுப்புக்காக “சாகித்ய அகாடமி விருது” பெற்றவர்
  • “தமிழ்நாடு வகுப்பு வாரியத் தலைவராக” 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.

இவரின் கவிதைத் தொகுப்புகள்

  •  பால்வீதி
  • நேயர் விருப்பம்
  • பித்தன்
  • ஆலாபனை (சாகித்திய அகாடமி விருது பெற்றது)
  • சுட்டுவிரல்
  • அவளுக்கு நிலா என்று பெயர்
  • சோதிமிகு நவகவிதை
  • நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
  • ரகசியப்பூ (புதுக்கவிதைகள்


ஈரோடு தமிழன்பன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment