ஆலாபனை (சாகித்ய அகாடமி விருது), பாரதிதாசன் விருது, தமிழன்னை விருது
ஆசிரியர் குறிப்பு
“கவிக்கோ” என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் “அப்துல் ரகுமான்” பிறப்பு நவம்பர் 9 1937
தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார்
“வானம்பாடி” இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கியவர்.
எழுதுபவர்களின் தலைவாயில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
அவர் “பால்வீதி” என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார்.
அத்தொகுதி வெளிவந்தபோது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார்.
தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து “முனைவர்” பட்டம் பெற்றவர்.
தமிழில் “ஹைக்கூ, கஜல்” அகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும், பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960-க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார்.
சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி, வாணியம்பாடி இஸ்லாமிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.
“அறிவுமதி” உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார்.
“ஆலாபனை” கவிதைத் தொகுப்புக்காக “சாகித்ய அகாடமி விருது” பெற்றவர்
“தமிழ்நாடு வகுப்பு வாரியத் தலைவராக” 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.