மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச்செல்வம், ஆசிய ஜோதி
ஆசிரியர் குறிப்பு
கவிமணி தேசிய விநாயகனார் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரிர் பிறந்தவர்
இவரின் பெற்றோர் சிவதாணு – ஆதிலெட்சுமி அம்மையார்
இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப, துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை.
இவர் இயற்றிய பிற நூல்கள் மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச்செல்வம், எட்வின் ஆர்னால்டின் ஆசிய ஜோதியைத் தமிழில் தழுவி எழுதியுள்ளார்.
இவரது காலம் 1876 – 1954
கவிமணிக்கு தேரூரில் 1952-ல் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இவர் உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்
உமர்கய்யாம் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர். இவரது முழுப்பெயர் கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம்.
இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
உமர்கய்யாம் பாடல்களில் இம்மை, மறுமை பற்றி ரூபாயத் என்னும் பெயரில் எழுதிய செய்யுள்களின் தொகுப்பை கவிமணி மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இதில் 115 பாடல்கள் உள்ளன.
வாழ்க்கைத் தத்துவத்தை இப்பாடல்கள் விளக்குகின்றன. (ரூபாய்த்-நான்கடிச் செய்யுள்).
2005-ல் இந்திய அரச முத்திரை வெளியிட்டு சிறப்பித்தது.