Krishnapillai – கிருஷ்ணப்பிள்ளை பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

கிருஷ்ணப்பிள்ளை – Krishnapillai

TNPSC Tamil Notes - Krishnapillai - கிருஷ்ணப்பிள்ளை

Group 4 Exams – Details

பெற்றோர் சங்கர நாராயணப்பிள்ளை – தெய்வநாயகியம்மை
பிறப்பு திருநெல்வேலி மாவட்டம், கரையிருப்பு
சிறப்புப்பெயர் கிறித்துவக் கம்பர்
நூல்கள் இரட்சணிய யாத்திரகம், இரட்சணிய மனோகரம், போற்றித் திருவகவல்
இரட்சணிய யாத்திரகம் நூல்களின் பாடல் எண்ணிக்கை 5 பருவங்கள், 3766 பாடல்கள்

ஆசிரியர் குறிப்பு

  • பிறப்பால் வைணவர். கிறிஸ்துவ சமயத்தின் மீது கொண்ட பற்றால் சமயம் மாறிப் பின் உண்மை கிறித்தவராக வாழ்ந்தவர்.
  • வைணவ சமய நூல்களில் புலமையும் பயிற்சியும் கொண்டவர்.
  • இரட்சணிய யாத்திரகம் நூலை இயற்றியவர் ஏச்.எ. கிருஷ்ணப்பிள்ளை என்னும் புலவர் ஆவார்.
  • இவர் திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் ஊரினர். இவர் பெற்றோர் சங்கர நாராயணப்பிள்ளையும், தெய்வநாயகியம்மையும் ஆவார்.
  • ஹென்றி ஆல்பிரட் என்பதன் சுருக்கமே எச்.ஏ என்பது ஆகும்
  • இரட்சணிய யாத்திரகம், இரட்சணிய மனோகரம், போற்றித் திருவகவல் முதலிய பல நூல்களையும் படைத்துள்ளளார்.
  • இரட்சணிய யாத்திரகத்துள் இடையிடையே தேவாரம் என்னும் பெயரிலமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் செய்யும் நீர்மையன
  • இப்புலவர்பிரானைக் கிறித்துவக் கம்பர் என்று பெரியோர் போற்றுகின்றனர்

நூற்குறிப்பு (இரட்சணிய யாத்திரகம்)

  • இரட்சணியம் என்பதற்கு ஆன்ம ஈடேற்றம் என்பது பொருளாம். ஆன்ம ஈடேற்றம் விரும்புவார் செல்லும் சிந்தனை யாத்திரை என்பதுவே இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்.
  • ஜான் பனியன் என்பார் எழுதிய பீல்கிரிம்ஸ் பிராகிரஸ் என்ற நூலினையே இரட்சணிய யாத்திரகம் என இந்நூலாசிரியர் படைத்துள்ளார்.
  • இது 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம்.
  • இது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது.

சீத்தலைசாத்தனார்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment