குறுந்தொகை

நூற்குறிப்பு
குறுந்தொகை |
குறுமை + தொகை |
ஆசிரியர் எண்ணிக்கை |
205 |
பாடல் எண்ணிக்கை |
401 + 1 (கடவுள் வாழ்த்து) |
எல்லை |
4-8 |
பொருள் |
அகம் |
தொகுத்தவர் |
பூரிக்கோ |
தொகுப்பித்தவர் |
தெரியவில்லை |
கடவுள் வாழ்த்து பாடியவர் |
பாரதம் பாடிய பெருந்தேவனார் |
தெய்வம் |
முருகன் |
- குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இதில் கடவுள் வாழத்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன
- இந்நூலைத் தொகுத்தவர் . பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்கு கடவுள் வாழத்துப் பாடியுள்ளார். இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.
- இந்நூல் வாயிலாகப் பண்டைத் தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு அறவுணர்வு முதலியவற்றை அறியலாம்.
மேற்கோள்கள் / பாடல்வரிகள்
9ஆம் வகுப்பு
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
– தேவகுலத்தார்
|
12 ஆம் வகுப்பு (Old)
யாரும் இல்லை;தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ?
தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே
– கபிலர்
திணை குறிஞ்சி
துறை – வரைவு நீட்டிய தலைமகனுக்கு தோழி கூறியது |
கபிலர் பற்றி கூறியவர்கள்:
வாய்மொழிக் கபிலன் – கூறியவர்கள் நக்கீரன்
நல்லிசைக் கபிலன் – பெருங்குன்றூர்க் கிழார்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் – இங்கீரனார்
புலன் அழுக்கற்ற அந்தணாளன், பொய்யா நாவிற் கபிலன் – மாறோக்கத்து நப்பசலையார் |
9ஆம் வகுப்பு
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர் சென்ற ஆறே.
(பாலை பாடிய பெருங்கடுங்கோ – 37வது பாடல்).
|
விருந்தை எதிர்கொள்ளும் தன்மை
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ”
குறுந்தொகை – 118
|
|
- பழந்தமிழர் வாழ்வினைக் காட்டும் காலக்கண்ணாடி இது.
நற்றிணை
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related