எம்.வி.வெங்கட்ராம் – M.V.Venkatram
Group 4 Exams – Details
கவிஞர் | எம்.வி.வெங்கட்ராம் |
பெற்றோர் | வீரய்யர் – சீதை அம்மாள் |
காலம் | 1920-2000 |
பிறப்பு | கும்பகோணம் |
புனைப்பெயர் | விக்ரஹவிநாசன் |
விருதுபெற்ற நூல் | காதுகள் (சாகித்திய அகாதெமி விருது – 1993) |
- எம்.வி.வெங்கட்ராம் தமிழ்சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர்.
- இவரது காலம் 18.05.1920 – 14.01.2000
- 1920-ம் ஆண்டு கும்பகோணத்தில் செளராஷ்டிரக் குடும்பத்தில் “வீரய்யர் – சீதை அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார்.
- ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம் – சரஸ்வதி குடும்பத்தினர் தொடக்கதில் பட்டுச்சரிகை வணிகம் செய்து கொணடு மணிக்கொடியில் சிறுகதை எழுதினார்.
- 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய “சிட்டுக்குருவி” என்ற சிறுகதை “மணிக்கொடியில்” வெளியானது.
- 1965-1970 கால கட்டத்தில் தனது பட்டுச்சரிகை வணிகத்தை கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார்.
- ஆங்கிலத்தில் இரந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார்.
- 1948-ல் தேனீ என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார்.
- இதழில் “மெளனி” போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பதிப்பித்திருக்கிறார்.
- பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்திற்காக அறுபது நூல்களை எழுதினார்.
- நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் தேசபக்தர்களைப் பற்றிய பள்ளி மாணவர்களுக்கான நூல்கள் ஆகும்.
- 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய “காதுகள்” என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.
இவரின் சிறுகதை தொகுதிகள்
- மாளிகை வாகம்
- உறங்காத கண்கள்
- மோகினி
- குயிலி
- இனி புதிதாய்
- நானும் உன்னோடு
- அகலிகை முதிலிய அழகிகள்
- எம்.வி. வெங்கட்ராம் கதைகள்
- முத்துக்கள் பத்து
- பனிமுடி மீது கண்ணகி
Related Links
Group 4 Model Questions – Download