மாணிக்கவாசகர் – Manickavasagar
Group 4 Exams – Details
பிறப்பு | திருவாதவூர் |
காலம் | கி.பி. 9-ம் நூற்றாண்டு |
சிறப்பு பெயர் | அழுது அடியடைந்த அன்பர் |
நூல்கள் | திருவாசகம், திருக்கோவையார் |
- சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர்.
- சைவ சமயக்குரவர்கள் – திருநாவுக்கரசர் (அப்பர்), திருஞான சம்பந்தர், சுந்தர், மாணிக்கவாசகர்
- இவர் மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர்.
- அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர்.
- பாண்டியனுக்காக குதிரை வாங்க சென்றபோது, திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
- திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப் பெற்றவர். அவ்விறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்க அழுது தொழுவர். இதனால் மாணிக்கவாசகரை, “அழுது அடியடைந்த அன்பர்” என்பர்.
- திருவாசகமும், திருக்கோவையாரும் இவர் அருளியன இவர் எழுப்பிய கோவில், தற்பொழுது ஆவுடையார் கோவில் என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம்) உள்ளது.
- காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு
- இறைவனின் பேரருளால் அமிழ்தத்தைப் பருகி உலகத்துச் சகாேதரர் அனைவரும் பெற, திருவாசகத்தைப் பாடி அருளினார்.
- “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்னும் தொடர் நன்கு உணர்த்துவதாகும். இவரது போற்றிய திரு அகவல் சைவர்கள் வழிபாட்டுக்குரிய பட்டாக அமைந்துள்ள்ளது.
- திருச்சதகப் பாடல்கள் உள்ளத்திற் தோய்ந்த வெளிப்பட அனுபவ வெளிப்பாடு ஆகும்.
- திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொற்கண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச் சாழல் திருத்தோள் நோக்கம் போல்வன வாய்மொழி இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
- ஆண்டாள் பாடிய திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் பாவைப் பாடல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை கடல் கடந்த நாடுகளிலம் பரவியுள்ளன. குறிப்பாக சயாம் நாட்டில் திருவெம்பாவை பெரிதும் போற்றப்படுகிறது.
- “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, திருக்கோவையார் என்னும் அகத்துறை நூலை மாணிக்கவாசகர் இயற்றியருளினார்.
- திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாந் திருமுறை ஆக்கப்பட்டுள்ளன.
- திருக்கோவையார் ஒரு அகநூல். இதற்கு “திருச்சிற்றம்பலக் கோவை” என்ற பெயரும் உண்டு. இதனை “ஆரணம், ஏரணம், காமநூல், எழுத்து” என்றெல்லாம் சொல்லப்படுவது திருக்கோவை
- ஜி.யு. போப் விரும்பி கற்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல் திருவாசகம்