மறைமலை அடிகள் – Maraimalai Adigal
Group 4 Exams – Details
அறிஞர் | மறைமலை அடிகள் |
இயற்பெயர் | வேதாச்சலம் |
பெற்றோர் | சொக்கநாதபிள்ளை – சின்னம்மாள் |
காலம் | 1876 – 19750 |
- தமிழகம் உரிமை இழந்து ஆங்கில மோகத்தில் ஆழ்ந்திருந்த காலத்தில் அருந்தமிழை போற்றி வளர்த்த அறிஞருள் ஒருவர் பதிரிமாற்கலைஞர்.
- இவரது காலம் 1876 – 15.9.1950
- வடமொழியையும், ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர் தனிச் செம்மொழியாம் தமிழை வடமொழி கலப்பின்றித் தூய நடையில் எழுதி பிறரையும் ஊக்குவித்தவர்.
- சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர்.
- பரிதிமாற் கலைஞரும், மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்.
- இவரின் இயற்பெயர் வேதாசலம். திருக்கழுகுன்றத்தில் பிறந்தவர்
- இவரின் பெற்றோர் சொக்கநாதர் – சின்னம்மையார்
- தனித்தமிழ் பற்று காரணமாக வேதாச்சலம் என்ற தன்பெயரை 1916-ல் மறைமலை (வேதம் – மறை, அசலம் – மலை) என்று மாற்றிக் கொண்டார்.
- மறைமலையடிகள் நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையின் இறப்பின் காரணமாக பள்ளிபடிப்பை அவரால் தொடர இயலவில்லை.
- பின் நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார்.
- சைவசித்தாந்த சண்டமாருதம் என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தரநாயக்கரிடம் சைவ சித்தாந்தம் கற்றார். சென்னைக்கு வந்த பின்னர் கிறிஸ்துவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாஸ்திரியாருடன் தமிழாசிரியராக பணிபுரிந்தார்.
- 1905-ல் சைவ சிந்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பை தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையயும் ஏற்றார்
- தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்தார்.
- முல்லைபாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி, சிவஞானபோத ஆராய்ச்சி, மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், தமிழர் மதம், திருவாசக விரிவுரை முதலான நூல்களை எழுதியுள்ளார்.
- கோகிலாம்பாள் கடிதங்கள், நாகநாட்டரசி முதலான புதினங்கள் சிறப்பு மிக்கவை
- தான் நடத்திய “ஞானசாகரம்” என்னும் இதழை “அறிவுக்கடல் என மாற்றியமைத்தார்.
இவரின் நூல்கள்
- பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்
- மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை
- மனித வசியம் அல்ல மனக்கவர்ச்சி (1927)
- யோக நித்திரை அறிதுயல் (1922)
- தொலைவில் உணர்தல் (1935)
- மரணத்தின் பின் மனிதர் நிலை (1911)
- சாகுந்தல நாடகம் (சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்த்தது) (1907)
- சாகுந்தல நாடக ஆசிரியர் (19340
- ஞானசாகரம் மாதிகை (1902)
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை (1903)
- பட்டினப்பலை ஆராய்ச்சியுரை (1905)
- சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
- முதற்குறள் வாத நிராகரணம் (18980
- திருக்குறள் ஆராய்ச்சி (1951)
- அம்பிகாவதி அமராவதி (நாடகம்)
- கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்)
- குமுதலவல்லி அல்லது நாகநாட்டரசி (புதினம்)
- மாணிக்கவாசகர் வரலாறு (1952)
- சோமசுந்தர காஞ்சியாக்கம் (1901)
- சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
- திருவாச விரிவுரை (1940)
- துகளறு போதம் உரை (1898)
- வேதாந்த மத விசாரம் (1890)