மோகனரங்கன் – Moganarangan
Group 4 Exams – Details
புலவர் | ஆலந்தூர் கோ.மோகனரங்கன் |
பெற்றோர் | கோ.மீனாம்பாள் – மா.கோபால் |
விருதுகள் & பட்டங்கள் | பாவேந்தர் விருது, குழந்தை இலக்கிய மாமணி, கவிவேந்தர், முத்தமிழ்க்கவிஞர் |
ஆசிரியர் குறிப்பு
- “ஆலந்தூர் கோ.மோகனரங்கன்” அவர்கள் தமிழ்ப்பா புனைவதில் முத்திரை பதித்த “பெரும் பாவலர்” ஆவார்.
- கிளை நூலகராகப் பணிபுரிந்தபடியே புகழ் பெற்ற பாக்களையும், இசைப்பாக்களையும் எழுதியவர்.
- “தமிழ்க் கவிதைகளில் சந்த அமைப்பு, வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
- ஆலந்தூர் கோ.மோகனரங்கள் அவர்கள் 01.06.1924-ல் சென்னையில் ஆலந்தூரில் பிறந்தவர்.
- பெற்றோர் கோ.மீனாம்பாள் – மா.கோபால்
- ஆலந்தூர் கோ.மோகனரங்கள் அவர்கள் சென்னைத் தியாகராயநகர் உயிர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுது “புதிய பாதை” என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியவர்.
- ஆலந்தூரில் “கவிதை வட்டம்” என்னும் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தித் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கவிஞர்கள் வந்து கலந்து கொள்ளும் கவியரங்குகளை நடத்தியவர்.
- திரு.வி.க., கா.சு.பிள்ளை, மயிலை சீனி வேங்கடசாமி, பன்மொழிப்புலவர், கா.அப்பாத்துரையார் உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை மறுபதிப்பு செய்த பெருமைக்குரியவர்.
- தமிழக அரசின் “பாவேந்தர் விருது, குழந்தை இலக்கிய மாமணி, கவிவேந்தர், முத்தமிழ்க்கவிஞர்” உள்ளிட்ட பட்டங்களையும், விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர்.
- தில்லியில் உள்ள “தேசிய புத்தக நிறுவனத்தார்” இவர் தம் கவிதைகளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துள்ளனர். “ஞான பீட நிறுவனத்தார்” இவர் தம் கவிதைகள இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டள்ளனர்.
- ஆலந்தூர் கா,மோகனரங்கன் அவர்களின் பாடல்கள் பள்ளிப்பாட நூல்களில் இடம் பெற்றுள்ளன.
இவரின் நூல்கள்
- பள்ளிப் பறவைகள்
- குப்பைமேட்டு பூனைக்குட்டி
- வணக்கத்திற்குரிய வரதாசனார் கதை
- இமயம் எங்கள் காலடியில்
- கொஞ்சு தமிழ்க்கோலங்கள்
- பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்
- பொய்யே நீ போய்விடு
- நினைத்தால் இனிப்பவளே
- இதயமே இல்லாதவர்கள்
- கவிதை எனக்கோர் ஏவுகணை
- குறுந்தொகையின் குழந்தைகள் (ஐக்கூ)
- பிறர் வாழப்பிறந்தவர்கள்
Related Links
Group 4 Model Questions – Download