மு.மேத்தா – Mu.Metha

புலவர் |
மு.மேத்தா |
பிறப்பு |
பெரியகுளம் (1945) |
விருது |
சாகித்திய அகாதெமி விருது (ஆகாயத்துக்கு அடுத்த வீடு) |
ஆசிரியர் குறிப்பு
- மு.மேத்தா (முகமது மேத்தா) பிறப்பு செப்டம்பர் 1945 பெரியகுளத்தில் பிறந்தார்.
- இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
- புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவர்.
- உவமை மற்றும் உருவகங்களில் பழமையும், புதுமையையும் இணைத்த மு.மேத்தா வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்நதவர். இவரைப் பின்பற்றி இளைஞர்கள் பலர் கவிதை எழுத ஆர்வம் கொண்டனர்.
- காதல் சோகமும், தமிழ்த் தாகமும், இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத்தொனியில் அமைந்த “தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி” என்ற கவிதை மு.மேத்தாவுக்க புகழ் தேடி தந்த கவிதை ஆகும்.
- “வானம்பாடி” என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்கள் “மு.மேத்தா” முன்னணியில் நிற்பவர். “நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்”. இறப்பினில் கண் விழிப்பேன், மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.
- மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு.மேத்தா அத்துறைகளில் 15-ற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.
- அவருடைய நூல்களுள் ஒன்றான “ஊர்வலம்” தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும்.
- இவரது “சோழ நிலா” என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போ்ட்டியில் முதல் பரிசு பெற்றது
இவரின் கவிதைத் தொகுப்புகள்
கண்ணீர் பூக்கள் |
ஊர்வலம் |
திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் |
இதயத்தில் நாற்காலி |
வெளிச்சம் வெளியே இல்லை |
மனச்சிறகு |
அவர்கள் வருகிறார்கள் |
காத்திருந்த காற்று |
நந்தவன நாட்கள் |
கம்பன் கவியரங்கத்தில் |
இவரின் மொழிபெயர்ப்பு கவிதைகள்
- சச்சிதானந்தன் கவிதைகள் (1998)
- உஜ்ஜியினி (ஓ.என்.வி.குரூப் – 2001)
- கவிதை மீண்டம் வரும் (சச்சிதானந்தன் – 2001)
- காலத்தை உறங்க விடமாட்டேன் (என்.கோபி – 2010)
- கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள் (2012)
சிற்பி
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related