முடியரசன் – Mudiarasan
Group 4 Exams – Details
புலவர் | முடியரசன் |
இயற்பெயர் | துரைராசு |
பெற்றோர் | சுப்பராயலு – சீதாலெட்சுமி |
காலம் | 1920 – 1998 |
நூல்கள் | பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள் |
ஆசிரியர் குறிப்பு
- முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
- இவரின் பெற்றோர் சுப்பராயலு – சீதாலெட்சுமி
- இவர் தமிழாசிரியராக காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தார்.
- பறம்பு மலையில் நடந்த விழாவில் கவியரசு என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது
- இவரது காலம் 1920 – 1998
- “திராவிட நாட்டின் வானம்பாடி” என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பெற்றவர்.
- ‘கவிஞன் யார்? என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா.. பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்’ என்று தந்தை பெரியாரால் பாராட்பட்டார்
- இவர் பாதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர்.
- பாரதிதாசனாரால் ‘என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..’ என்று பாராட்டப்பெற்றவர்.
- தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.
- இவர் இயற்றிய நூல்கள் பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள் முதலியன.
- பூங்கொடி என்னும் காவியத்துத்க்காக 1966-இல் தமிழக அரசு பரிசு வழங்கியது.
- சாதி மறுப்பு திருணம் செய்தார்
- இவரது கவிதைகளை சாகித்ய அகாடமி தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளது.
ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் இவ்வரிகள் முடியரசனின் தணியாத தண்டமிழ்க் காதலை வலியுறுத்தும் |