Muthollayiram – முத்தொள்ளாயிரம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

முத்தொள்ளாயிரம் – Muthollayiram

TNPSC Tamil Notes - Muthollayiram - முத்தொள்ளாயிரம்

Group 4 Exams – Details

நூல் முத்தொள்ளாயிரம்
பாவகை வெண்பா
பாடல்களின் எண்ணிக்கை 900
ஆசிரியர்  ——

நூற்குறிப்பு

  • சங்க இலக்கியத்திற்குப் பின்னர் தோன்றிய நூல்.
  • தனிப்பாடல்களின் தொகுதி, வெண்பாக்களால் ஆனது.
  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
  • அகமும், புறமும் இணைந்த நூல்; எனினும் அகப்பொருளுக்கே முதன்மை தருகிறது.
  • சிலப்பதிகாரத்திற்கு முன்பே மூவேந்தர்களையும் பாடிய நூல்.
  • சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும், சேரநாட்டை ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும், பாண்டிய நாட்டை முத்துரை நாடாகவும் காட்டுகிறது.
  • மூன்று + தொள்ளாயிரம் என்று பிரித்து ஒவ்வொரு மன்னர்களும் 900 பாடல்கள் வீதம் மொத்தம் (900 x 3 = 2700) பாடல்கள் கொண்ட நூலாக இருந்திருக்க வேண்டும் என்பர்.
  • மூன்று + தொள்ளாயிரம் என்பதற்கு மூன்று மன்னர்களின் மீது;  ஆளுக்கு 300 பாடல் வீதம் பாடப்பட்ட தொள்ளாயிரம் பாடல்களை உடையது என்றும் பொருள் கூறுகின்றனர்.
  • புறத்திரட்டு என்ற புறநூல் தொகுப்பின் மூலம் 108 பாடல்கள் கிடைத்தன.
  • உரைகளின் மூலம் 22 பாடல்கள் கிடைத்தன
  • கிடைத்துள்ள முத்தெள்ளாயிரப் பாடல்களில் பாண்டியனுக்கு 61, சோழனுக்கு 46, சேரனுக்கு 23 பாடல்கள் கிடைத்துள்ளன.
  • இதன் புறப்பாடல்கள் சங்க இலக்கியம் போல் இயல்பு நவிற்சியாகக் கூறாமால் உயர்வு நவிற்சியாகவே கூறுகிறது.
  • சங்க இலக்கியத்தில் ஆண்பால் கைக்கிளைப் பாடல்கள் சில உள்ளன;  பெண்பால் கைக்கிளைப் பாடல் கிடையாது.
  • முத்தொள்ளாயிரத்தில் பெண்பாற் கைக்கிளைப் பாடல்கள் பல உள்ளன.
  • சங்க இலக்கியத் தலைவி தன் காதலைத் தன் தோழியிடமே வெளிப்படையாக கூறத் தயங்குவாள்.
  • முத்தொள்ளாயிரத்த் தலைவி தன் காதல் துன்பத்தைப் பலர் முன்பு கூறுகின்றாள்.
  • மன்னனைக் கண்டால் தன் மகள் அவனைக் காதலிப்பாள் என்று கதவடைக்கும் தாயும் முத்தொள்ளாயிரத்தில் உண்டு.
  • சங்க இலக்கிய அகமரபில் பெயர் சுட்டும் மரபு இல்லை. முத்தொள்ளாயிரத்தில் மன்னன் என்ற தகுதியையும் சேரன், சோழன், பாண்டியன் என குலம் கட்டப்படுகின்றன. எனினும் தனிப்பட்ட ஒரு மன்னனின் பெயரைச் சுட்டவில்லை.
  • முத்தொள்ளாயிரம் என்ற நூல் குறித்துத் தன் உரையில் குறிப்பிடும் உரையாசிரியர், பேராசிரியர்.
  • சங்க இலக்தியத்திற்குப் பின்பும், அறநூல்களுக்கு முன்பும் முத்தொள்ளாயிரம் தோன்றியிருக்க வேண்டும்.
  • தொள்ளாயிரம் என்பது இலக்கிய வகைபோலும்.
  • 11ஆம் நூற்றாண்டில் வச்சத் தொள்ளாயிரம் தோன்றியது.
  • 12ஆம் நூற்றாண்டில் அரும்பைத் தொள்ளாயிரம் என்ற நூல் தோன்றியது.

மேற்கோள்

பல்யானை மன்னீர்! படுதிறை தந்துஉய்மின்

மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின்

வாள் இதழ் வாடாத வானோரும் வானவன்

வில்எழுதி வாழ்வார் விசும்பு – சேரன் பற்றியது

சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி

ஈர்ந்திட்டு உயர்துலைதான் ஏறினான் – நேர்ந்த

கொடை வீரமோ மெய்ந்நிறை குறையா வன்கண்

படைவீரமோ சென்னி மாண்பு – சோழன் பற்றியது

மருப்புஊசி யாக மறம்கனல்வேல் மன்னர்

உருத்தகு மார்பு ஓலையாக – திருத்தக்க

வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே

மொய்இலைவேல் மாறன் களிறு – பாண்டியன் பற்றியது


கம்பராமாயணம்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment