Muthukumarasamy Pillaitamil – முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் – Muthukumarasamy Pillaitamil

TNPSC Tamil Notes - Muthukumarasamy Pillaitamil - முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

Group 4 Exams – Details

நூல் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
ஆசிரியர் குமரகுருபரர்
ஆசிரியர் காலம் 17-ம் நூற்றாண்டு
பாடல்கள் எண்ணிக்கை 10 பருவங்கள், 100 பாடல்கள்

நூற்குறிப்பு

  • சிற்றிலக்கிய வகையான பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்று
  • ஆசிரியர் குமரகுருபரர்
  • 17-ம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்
  • ஐந்து வயது வரை ஊமையாக இருந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசுந்திறம் பெற்றவர்
  • முருகன் அருள் பெற்றவுடன் பாடிய நூல் கந்தர் கலிவெண்பா.
  • முருகப் பெருமானால் “குருபரன்” என்று அழைக்கப் பெற்றவர்
  • தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளை கற்றவர்.
  • தமிழையும், தெய்வத்தையும் இரு கண்களாக கருதியவர் குமரகுருபரர்
  • காசியில் இறைவனடி சேர்ந்தார்
  • புள்ளிருக்கு வேளூரில் உள்ள முருகனின் பெயர் முத்துக்குமாரன். அவர் மீது பாடப்பட்டது. ஆதலால் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் எனப்பெயர் பெற்றது.
  • மாசிலாமணி தேசிகரிம் மெய்ப்பொருள் பெறவந்த குமரகுருபரர் தில்லை செல்லும் வழியில் புள்ளிருக்கு வேளூரில் தங்கியபோது, முருகன் தன்னைப் பாடப்பணித்த போது பாடியது.
  • இதற்கு முத்தையன்  பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் சேனாதிபதி பெருமான் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் குமாரதேவர் பிள்ளைத்தமிழ் என்ற பெயர்களும் வழங்கின
  • பருவத்திற்குப் பத்துப் பாடல்களாக நூறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
  • இருபாலருக்கும் பாெதுவான பருவங்கள் : காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
  • ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) : சிற்றில், சிறுபறை, சிறுதேர்
  • பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) : கழங்கு, அம்மானை, ஊசல்

மேற்கோள்

உலகு குளிர எமது மதியில் ஒழுகும் “அந்த கிரணமே”
உருகும் அடியார் இதயம் நெகிழ உணர்வில் எழுநூல்
உதயமே

– என முருகனைப் போற்றுகிறார்!

திருவேங்கடத்தந்தாதி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment