Pazhamozhi Naanuru – பழமொழி நானூறு பற்றிய செய்தி குறிப்புகள்

 பழமொழி நானூறு 

TNPSC Tamil Notes - Pazhamozhi Naanuru - பழமொழி நானூறு 

நூற்குறிப்பு

  • மக்கள் தம் பட்டறிவால் பெற்ற கருத்தை சுருக்கமாக கூறியதே பழமொழியாகும்.
  • பழமொழியை மூதுரை, முதுமொழி, உலக வசனம் எனவும் கூறுவர்.
  • ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழி இடம்பெறுமாறு பாடப்பெற்ற 400 வெண்பாக்களைக் கொண்ட நூல் பழமொழி. இதனைப் பழமொழி நானூறு எனவும் குறிப்பிடுவர்.
  • 34 அதிகாரம், 400 பாடல்கள்

ஆசிரியர் குறிப்பு

  • பழமொழி என்னும் நீதிநூலை இயற்றியவர் முன்றுறையரையனார். இவர் சமண சமயத்தை சார்ந்தவர்
  • “அரையன்” என்பது அரசரைக் குறிக்கும் சொல். இவர் பாண்டிய நாட்டு முன்றுரை என்னும் ஊரை ஆட்சிபுரிந்த சிற்றரசர் என ஆராய்ச்சியாளர் கூறுவர்.
  • இவர் வாழ்ந்த காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுகள்
  • வேறுபெயர் – “முதுசொல்”

பா வகை

  • பழமொழி நானூறு வெண்பாக்களால் ஆன அறநூலாகும். அதிகாரங்களில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

சிறந்த தொடர்கள்

  • பாம்பறியும் பாம்பின் கால்
  • முள்ளினால் முள் களையுறுமாறு
  • இறைத்தோறும் ஊறுங்கிணறு
  • ஆயிரங் காக்கைக் கோர்கல்
  • திங்களை நாய் குரைத்தன்று
  • கற்றலின் கேட்டலே நன்று
  • குலவிச்சை கல்லாமல் பாகம் படும்
  • குன்றின் மேலிட்ட விளக்கு
  • நுணலும் தன்வாயால் கெடும்

முறைக்கு மூப்பு இளமை இல் (கரிகால்)

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment