புறநானூறு
நூற்குறிப்பு
புறநானூறு | புறம் + நான்கு + நூறு |
ஆசிரியர் எண்ணிக்கை | 158 |
பாடல் எண்ணிக்கை | 400 |
எல்லை | 4-40 |
பொருள் | புறம் |
தொகுத்தவர் | தெரியவில்லை |
தொகுப்பித்தவர் | தெரியவில்லை |
கடவுள் வாழ்த்து பாடியவர் | பாரதம் பாடிய பெருந்தேவனார் |
தெய்வம் | சிவன் |
- புறம் என்பது மறம் செய்தலும், அறம் செய்தலும் ஆகும்
- இந்நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த புலவர்களாலும், மன்னர்களாலும் பாடப்பெற்றவை.
- புறநானூற்றுப் பாடல்கள் மூலம் பண்டைய தமிழக மன்னர்களின் “அறஉணர்வு, வீரம், கொடை, ஆட்சிச்சிறப்பு, கல்விப்பெருமை” முதலியவற்றையும் புலவர்களின் பெருமிதம், மக்களுடைய நாகரிகம், பண்பாடு முதலியவற்றையும் அறியலாம்.
- வேறுபெயர்கள் – புறம், புறம்பாட்டு, புறம்பு, தமிழ் கருவூலம்
மேற்கோள்கள் / பாடல்கள்
- வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய்கூறுவல்
தென்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், உண்பது நாழி, உடுப்பது இரண்டே பிறவும் இல்லாம் ஓரொக்குமே, செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் |
நாடா கொன்றோ, காடா கொன்றோ, – ஒளவையார் |
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய சாலார் சாலார் ஆகுபவே – கண்ணகனார் |
கொடை மடம் படுத லல்லது படைமடம் படான்பிறர் படைமயக் குறினே – பரணர் |
கணிச்சிக் கூர்மபடைக் கடுந்திறலொருவன் பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ – நரிவெரூ உத்தலையார் |
நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி – வெண்ணிற் குயத்தியார் என்ற பாடல் வரிகள் மூலம் முன்னோர் கப்பற்பயணம் செய்தமையை அறியலாம் |
செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே (புறம் 189; 7-8) செல்வத்தைத் தனியே அனுபவித்தல் இழத்தலுக்குச் சமம் |
8ஆம் வகுப்பு 2-ஆம் பருவம்கூம்பொடு மீப்பாய் களையாது பாய்மரக் கப்பல்களில் பாய் பயன்படுத்தியதை குறிப்பிடுகிறது. |
8ஆம் வகுப்பு 2-ஆம் பருவம்நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணர் பற்றி குறிப்பிடுகிறது. |
8ஆம் வகுப்பு 2-ஆம் பருவம்கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் முழவு இசைக் கருவியை பற்றி குறிப்பிடுகிறது. |
8ஆம் வகுப்பு 2-ஆம் பருவம்மீனோடு நெற்குவைஇ ஏற்றுமதி, இறக்குமதி பற்றி தெரிவிக்கிறது |
9ஆம் வகுப்புஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (புறம் – 18) உண்பது நாழி உடுப்பவை இரண்டே! (புறம் – 189) யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம் – 192) சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்ததும், |
குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் “பூட்கையி ல்லோன் யாக்கை போல” (புறம். 69) |
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன் – புறம். 134 ( அடி 1 – 2 ) |
இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் தீது இல் யாக்கையொ டு மாய்தல் தவத்தலையே – (புறம். 214, 11-13) |
”இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய பலவே”. – புறம் 34 (அடி 21-23) |
10ஆம் வகுப்புதனித்து உண்ணாமை “உணடால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் புறநானூறு – 182 |
இன்மையிலும் விருந்தோம்பல் குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து புறநானூறு – 333 நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் புறநானூறு – 316 |
கொடை
செல்வத்தின் பயனே ஈதல் (புறம் 189 :7-8) |
போர் அறம்
எறியார் எறிதல் யாவணது எறிந்தார் |
அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் |
பிறசெய்திகள்
- ஜி.யு.போப் புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
- தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்குவது இந்நூல்
- புறநானூற்றின்கண் 11 புறத்திணைகளும் 65 துறைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன. (12 திணைகளில் உழிஞ்சை திணை தவிர)