R.B.Sethu Pillai – இரா.பி.சேதுபிள்ளை பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

இரா.பி.சேதுபிள்ளை – R.B.Sethu Pillai

TNPSC Tamil Notes - R.B.Sethu Pillai - இரா.பி.சேதுபிள்ளை

Group 4 Exams – Details

அறிஞர்  இரா.பி.சேதுபிள்ளை
பெற்றோர் பிறவிப்பெருமான் பிள்ளை – சொர்ணம்மாள்
காலம் 1896 – 1961
பிறப்பு திருநெல்வேலி மாவட்டடம், இராஜவில்லிபுரம்
விருது பெற்ற நூல் தமிழின்பம் – சாகித்திய அகாதமியின் பரிசு
  • இரா.பி.சேதுபிள்ளை (1896 – 1961) ஒரு தமிழ் அறிஞர்.
  • எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர், தமிழ் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் வாய்ந்தவர்.
  • இனிய உரைச்செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பராட்டியுள்ளனர்.
  • உரைநடையில் அடுக்கு மொழியையும் செய்யுளுக்கு உரிய எதுகை மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகிறது.
  • “சேதுப்பிள்ளை” தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் “இராசவல்லிபுரம்” என்ற ஊரில் 1896-ம் ஆண்டு மார்ச் திங்கள் 2-ம் நாள் பிறவிப் பெருமான் பிள்ளை – சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
  • ஐந்தாண்டு நிரம்பிய சேது உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து தமிழ் நீதி நூல்களைக் கற்றார். பின்னர் தனது தொடக்கக் கல்வியைப் பாளையங்கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் (இண்டர் மீடியட்) இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார்.
  • தாம் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே, சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து படித்தார்.
  • நெல்லையில் வழக்குரைஞர் தொழிலை மேற்கொண்ட சேது நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இப்பணியின் போது இவர் நெல்லை நகரில் தெருக்களின் பெயர்கள் தவறாக வழங்கி வந்ததை மாற்றி அத்தெருக்களின் உண்மையான பெயர்கள் நிலைபெறுமாறு செய்தார். வழக்குரைஞராக இருப்பினும் தமிழ் மொழியின் மீது பற்றுக் கொண்டிருந்தார்.
  • இவரின் செந்தமிழ்த்திறம் அறிந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரைத் தமிழ் அறிஞராக ஏற்றக்கொண்டு தமிழ்த்துறையில் தமிழ்ப் பேரறிஞர் பதவியை அளித்தது.
  • சேதுப்பிள்ளை தமிழ்த்துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்து விபுலானந்தர், சோமசுந்தர பாரதியார் ஆகிய இருபெரும் புலவர்களின் தலைமயில் தொடர்ந்து ஆறாண்டுகள் பணிபுரிந்தார்.
  • 1936-ல் சென்னைப்பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையை தமிழ் பேராசிரியராக அமர்ந்த்தியது.
  • 25 ஆண்டுக்காலம் சென்னைப்பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும், பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும், தமிழ் உரைநடைக்கு சிறப்பையும் சேர்த்தார்.
  • அந்நாளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்சித்துறைத் தலைவராகப் பேராசியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார். வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப்பணி இனிது நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப் பிள்ளையின் ஓய்வுக்குப் பின் இவர் தலைமைப் பதவி ஏற்றார்.
  • இவரின் முயற்சியால் திராவிடப்பொதுச் சொற்கள், திராவிட பொதுப் பழமொழிகள் ஆகிய இரு நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இவரின் மேடைப்பேச்சு ஒவ்வொன்றும் மேன்மை மிகு உரைநடைப் படைப்பாக அமைந்தது. அவரின் அடுக்குமொழித் தமிழுக்கு பாராட்டும் கிடைத்தன. சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் அவரது கம்பராமாயணச் சொற்பொழிவு மூன்றாண்டுகள் நடைபெற்றது. அச்சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் கம்பர் கழகம் நிறுவப்பட்டது.
  • இரா.பி.சேதுப்பிள்ளையின் உரைநடை நூல்கள் இருபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அடங்குவன. பதினான்கு கட்டுரை நூல்கள் மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார். நான்கு நூல்களை பதிப்பித்தார். எனவே அவரது உரைநடை மேடைப்பேச்சின் இயல்பினில்  அமைந்ததாக உள்ளது. ஆதலின் அவரது எழுத்தும், பேச்சும் வேறுபாடின்றி அமைந்துள்ளன. இலக்கிய அமைப்புகளில் அவர் ஆற்றிய எழுச்சி மிகுந்த சொற்பொழிவுகளே இனிய உரைநடையாக வடிவம் பெற்றன.
  • இவர் எழுதிய முதல் கட்டுரை நூல் “திருவள்ளுவர் நூல் நயம்” என்பதாகும். படைத்த உரைநடை நூல்களுள் தலைச்சிறந்ததாகவும், வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்குவது “தமிழகம் – ஊரும் பேரும்” என்பதாகும். இந்நூல் அவரின் முதிர்ந்த ஆராய்ச்சிப் பெருநூலாகவும், ஒப்பற்ற் ஆராய்ச்சிக் கருவூலமாகவும் திகழ்கிறது. மேலும்
  • சிலப்பதிகார நூல்நயம்
  • தமிழ் இன்பம்
  • சிலப்பதிகார நூல்நயம்
  • தமிழ்நாட்டு நவமணிகள்
  • சிலப்பதிகார நூல்நயம்
  • தமிழ்வீரம்
  • தமிழ்விருந்து
  • வேலும் வில்லும்
  • வழி வழி வள்ளுவர்
  • செஞ்சொற் கவிக்கோவை
  • பாரதியாரின் கவித்திரட்டு போன்ற நூல்கள் இவரின் படைப்பாகும்
  • சேதுப்பிள்ளையின் “தமிழின்பம்” என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் “சாகித்திய அகாதமியின் பரிசு” வழங்கப்பட்டது. மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார் சுத்தானந்த பாரதியார்.
  • அடுக்குமொழி, எதுகை-மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் “தருமபுர ஆதீனம்” 1950-ம் ஆண்டு “சொல்லின் செல்வர்” என்னும் விருது வழங்கியது. சேதுப்பிள்ளையின் நடை, ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார். சேதுப்பிள்ளை ஏப்ரல் 25, 1961-ல் தம் 65-ம் வயதில் இறந்தார்.
  • இரா.பி.சேதுப்பிள்ளையின் உரைநடைகளில் அடுக்குத்தொடர், எதுகை-மோனை, இயைபு, முரண் ஆகியன அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு – அருமையான தமிழ்ச்சொல் ஒன்று இருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பார் உண்டோ? தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் சொல்லின் செல்வர் என்று போற்றபட்டவர் பேராசிரியர் இரா.பி.சேதுப்பிள்ளை.
  • அவரது சென்மார் செந்தமிழ் சொற்கள் நடம்புரிய எதுகையும், மோனையும் பண்ணிசைக்க, சுவைதரும் விதை மேற்கோளாக எடுப்பான நடையில் நின்று நிதானித்துப் பொழியும் என்று “அன்பழகன்” குறிப்பிடுகின்றார்.

மறைமலை அடிகள்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment