எஸ்.தருமாம்பாள் – S.Dharmambal
பெயர் | எஸ்.தருமாம்பாள் |
இயற்பெயர | சரஸ்வதி |
காலம் | 1890 – 1959 |
பிறப்பு | தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கருன்கரந்தை |
பெற்றோர் | சாமிநாதன்-பாப்பம்மாள் |
- தந்தை பெரியாரின் கருத்து இவர் விதவைகள் மறுமணம், கலப்புமணம் மற்றும் பெண் கல்வி போன்றவற்றில் ஆர்வம் காட்டினார்.
- தமிழ் இசை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
- இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனை பெற்றார்.
- சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்ட தர்மாம்மாள் சித்த மருத்துவமனை ஒன்றை தொடங்கினார்.
- 1940-ஆம் ஆண்டு வரை சமுதாயத்தில் தமிழாசிரியர்களுக்கு மதிப்பு இல்லை. ஊதியம் உயர்த்தப்படவில்லை. இழவு வாரம் என்ற பேராட்டத்தை தொடங்கினார். இதன் விளைவாக கல்வி அமைச்சராக இருந்த திரு.அவிநாசிலிங்கம் செட்டியார் பிற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ் ஆசிரியர்களுக்கும் வழங்க உத்திரவிட்டார்.
- இவர் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி வீரத்தமிழன்னை பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டம் பெற்ற தரும்மாம்பாள் ஈ.வே.ராமசாமி நாயகருக்கு பெரியார் என்ற பட்டத்தையும், எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு ஏழிசை மன்னர் என்ற பட்டத்தையும் வழங்கினார்
- அம்மையார் தனது 69-வது வயதில் 1959-ம் ஆண்டு காலமானார்.
Related Links
Group 4 Model Questions – Download