சீறாப்புராணம்
நூல் | சீறாப்புராணம் |
ஆசிரியர் | உமறுப்புலவர் (இஸ்லாமிய கம்பர்) |
பாடல் எண்ணிக்கை | 92 படலங்கள், 5027 விருத்தப்பாக்கள் |
உரை எழுதியவர் | கா.ப.செய்குதம்பிப் பாவலர் |
நூற்குறிப்பு
- சீறாப்புராணம் நபிகள் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல்.
- சீறாப்புராணத்தை இயற்றிவர் உமறுப்புலவர்.
- இஸ்லாமிய கம்பர் எனவும் போற்றப்பட்டவர்.
- இவரின் தந்தை செய்துமுகமது அலி
- இவரை ஆதரித்தவர் வள்ளல் சீதக்காதி
- கீழக் கரையில் பிறந்தவர்
- எட்டையபுரம் அரசவைப் புலவராக விளங்கியவர்
- இவர் கடிகை முத்துப் புலவரது மாணவர்
- வாலை வாரிதி என்னும் கவிஞரை பதினாறவது வயதிலேயே வாதாடி வென்றார்.
- இவரும் படிக்காசு புலவரும் சமகாலத்தவர்
- இவரை அமுதா கவிராசர் என்றும் அழைப்பர்
- அப்துல்காதிர் மரைக்காயர் எனப்படும் சீதக்காதி வள்ளலின் வேண்டுகோள்படி சீறாப்புராணத்தை எழுத தொடங்கினார். சீதக்காதி மறைந்த விட்டதால் பின்னர் அபுல்காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் (80 பாடல்) நிறைவு பெற்றது.
- உமறுப்புலவர் முதுமொழி மாலை என்ற நூலையும் எழுதியுள்ளார். இவரின் காலம் 17 நூற்றாண்டு.
- சீறா என்றால் “வாழ்க்கை”, புராணம் என்றால் “வரலாறு” என்று பொருள்படும்
- சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்தக் காண்டம், ஹிர்ஜ்ரத்துக் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளை உடையது. 92 படலங்கள் மற்றும் 5027 விருத்தப்பாக்களால் ஆனது.