சீத்தலைசாத்தனார் – Seethalai Sathanar
Group 4 Exams – Details
பிறப்பு | சீத்தலை (திருச்சிராப்பள்ளி) |
காலம் | கி.பி. 2ஆம் நூற்றாண்டு |
சமயம் | பெளத்தம் |
சிறப்பு பெயர் | தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன், காப்பிய புலவர் |
இயற்றிய நூல் | மணிமேகலை |
ஆசிரியர் குறிப்பு
- மணிமேகலை நூலின் ஆசிரியர் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
- சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.
- இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்தார். மதுரையில் வாழ்ந்தார். கூல வாணிகம் (தானியம்) புரிந்தார். இக்காரணங்களினால் இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பெற்றார்.
- இளங்கோவடிகளும், இவரும் சமகாலத்தவர்.
- இவர் கடைச் சங்கப் புலர்களுள் ஒருவர்.
- “தண்டமிழ் ஆசான்”, “சாத்தன் நன்னூற் புலவன்” என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் புகழந்து பாடியுள்ளார்.
- காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
நூற்குறிப்பு
- சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும்.
- சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெல்வேறு நூல்களாயிலும் ஒரே கதைத் தொடர்புடையமையால் இரட்டைகாப்பியங்கள் எனப்படுகிறது
- கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவன் மணிமேகலை. அவளது துறவு வாழ்க்கை பற்றி கூறும் நூல் மணிமேகலை எனப் பெயர் பெற்றது.
- இந்நூலுக்கு “மணிமேகலைத் துறவு” என்னம் வேறு பெயரும் உண்டு.
- இந்நூல் சொற்சுவையும், பொருட்சுவையும், இயற்கை வருணனைகளும் நிறைந்தது.
- பெளத்த சமயச் சார்புடையது. முப்பது காதைகளை கொண்டது.
- இவற்றுள் நம்பாடப் பகுதியான ஆதிரை பிச்சையிட்ட காதை பதினாறவது காதையாகும்
Related Links
Group 4 Model Questions – Download