Seethalai Sathanar – சீத்தலைசாத்தனார் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சீத்தலைசாத்தனார் – Seethalai Sathanar

Group 4 Exams – Details

பிறப்பு சீத்தலை (திருச்சிராப்பள்ளி)
காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு
சமயம் பெளத்தம்
சிறப்பு பெயர் தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன், காப்பிய புலவர்
இயற்றிய நூல் மணிமேகலை

ஆசிரியர் குறிப்பு

  • மணிமேகலை நூலின் ஆசிரியர் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
  • சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.
  • இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்தார். மதுரையில் வாழ்ந்தார். கூல வாணிகம் (தானியம்) புரிந்தார். இக்காரணங்களினால் இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பெற்றார்.
  • இளங்கோவடிகளும், இவரும் சமகாலத்தவர்.
  • இவர் கடைச் சங்கப் புலர்களுள் ஒருவர்.
  • “தண்டமிழ் ஆசான்”, “சாத்தன் நன்னூற் புலவன்” என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் புகழந்து பாடியுள்ளார்.
  • காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.

நூற்குறிப்பு

  • சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும்.
  • சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெல்வேறு நூல்களாயிலும் ஒரே கதைத் தொடர்புடையமையால் இரட்டைகாப்பியங்கள் எனப்படுகிறது
  • கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவன் மணிமேகலை. அவளது துறவு வாழ்க்கை பற்றி கூறும் நூல் மணிமேகலை எனப் பெயர் பெற்றது.
  • இந்நூலுக்கு “மணிமேகலைத் துறவு” என்னம் வேறு பெயரும் உண்டு.
  • இந்நூல் சொற்சுவையும், பொருட்சுவையும், இயற்கை வருணனைகளும் நிறைந்தது.
  • பெளத்த சமயச் சார்புடையது. முப்பது காதைகளை கொண்டது.
  • இவற்றுள் நம்பாடப் பகுதியான ஆதிரை பிச்சையிட்ட காதை பதினாறவது காதையாகும்

ஆண்டாள்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment