சித்தர் பாடல்கள் – Siddhar Padalgal
Group 4 Exams – Details
பாடல் குறிப்பு
- சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடுமலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்
- பாம்பாட்டிச்சித்தர், குதம்பைச் சித்தர், அழுகிணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப்பெயர்கள்.
- காடுவெளிச்சித்தர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்; எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்
- சிறப்பாக நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் கூறுகளையும், இலக்கியங்களையும், கலைகளையும் ஆராய்வது நாட்டுப்புறவியல் எனலாம்.
பதினெண் சித்தர்
- தமிழ்நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்தனர்; வாழ்ந்து வருகின்றனர்.
- இவர்கள் மருத்துவம், மந்திரம், இரசவாதம், யோகம், ஞானம் பற்றி உலக வழக்குச் சொற்களைக் கொண்டு நாட்டுப்புறப்பாடல் மரபில் பாடியுள்ளார்.
- இவற்றில் மேற்போக்கான பொருள் ஒன்றாகவும் உட்பொருள் ஒன்றாகவும் இருக்கவும். திருமூலரே முதற்சித்தர் எனப் போற்றப்படுகிறார்.
- சித்த மருத்துவத்தின் முன்னோடிகள் சித்தர்களே. இவர்களை அக்கால அறிவியல் அறிஞர்கள், இயற்கை நிபுணர்கள் எனக் கூறலாம்.
- சித்தர்களின் தலைவராக அகத்தியர் விளங்கினார், சித்தர்களில் மிகுந்த சீர்திருத்தவாதி சிவவாக்கியர்
பதினெண் சித்தர்
- அகத்தியர், பலத்தியர், புகண்டர், நந்தி, திருமூலர், காலங்கிநாதனர், போகர், கொங்கணர், உரோம்முனி, சட்டைமுனி, மச்சமுனி, கரூரார், தன்வந்திரி, தேரையூர், பிண்ணாக்கீசர், கோரக்கர் யூசிமணி, இடைகாடர்.
- இவர்களைத் தவிர பாம்பாடடிச்சித்தர், அகப்பேயச்சித்தர், கடுவெளிச்சித்தர், அழுகிணிச் சித்தர், சிவவரக்கியார் போன்றோர்கள் சித்தர்களாக விளங்கி உலக நிலையாமை, மூடநம்பிக்கை, ஒழிப்பு, சடங்கு ஆசாராங்களை வெறுத்தல் என்ற புரட்சிகரமான கருத்துகளை உலகிற்கு வழங்கினார்.
- பத்திரகிரியாரின் பாடல்கள் “மெய்ஞஞானப் புலம்பல்” மிகவும் சிறந்தவை. அழுகிணிச் சித்தரின் பாடல்கள் உள்ளத்தை உருக்குபவை.
- கடவுளைக் காண முயல்பவர்கள் பத்தர்கள் கண்ட தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று தேவாரம் கூறுகிறது.
- சித்தர்களின் பஞ்சமர் (ஐவர்) என்று குறிப்பிடப்படுவார்கள்
1. திருமூலர் | 2. சிவவாக்கியர் | 3. பட்டினத்தார் |
4. திருமாளிகைத் தேவர் | 5. கருவூரார் |
- சித்தர் பாடல்கள் மக்கள் இலக்கியம் என்ற போற்றப்படுகிறது
Related Links
Group 4 Model Questions – Download