சிறுகதைகள் – Sirukathaigal
Group 4 Exams – Details
சிறுகதையின் இலக்கணம்
- கற்பனைக் கதைகள், உண்மை நிகழ்வுகள் மற்றும் நகைச்சுை கலந்தே சிறுகதைகள் எழுதப்படும்.
- இவற்றை முறையே தொல்காப்பியர் கூறிய பொருளோடு புணராப் பொய்ம்மொழி பொருளோடு புணர்ந்த நகைமொழி என்று கூறியவற்றோடு ஒப்புணரத் தக்கன.
- எட்டுத்தொகைப் பாடல்கள் அனைத்தும் சிறுகதை வடிவின எனலாம். காப்பியங்கள், புரானங்களில் காணப்படும் கிளைக்கதைகளும் சிறுகதை, நெடுங்கதை வடிவின
- தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், உச்சகட்டம், முடிவு என்னும் 5 கூறுகளைச் சிறுகதை கொண்டிருக்கும். அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கதை நீளக்கூடாது.
- குதிரைப் பந்தயத்தின் தொடக்கம், முடிவு போல கூர்மை இருக்க வேண்டும். கிளைக் கதைகள் கூடாது.
- கதையில் கூறப்படும் ஒவ்வொரு நிகழ்வும் கதையோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பன சிறுகதைக்கான வரையறைகள்
சிறுகதை வரலாறு
- கதை கூறலும் கேட்டலும் மனித வாழ்க்கையில் கலந்த ஒன்று. எனவே ஒவ்வொரு மனித சமூகத்திலும் கதைகள் நிரம்ப உள்ளன. எனவே சிறுகதையைத் தனியொரு இலக்கியமாகக் கருதுகின்ற நோக்கினை அமெரிக்காவைச் சேர்ந்த எட்கர் ஆலன்போ தொடங்கி வைத்தார்.
- மேனாட்டர் வரவும் அறிவியில் வளர்ச்சியும், பத்திரிகைகளின் பக்கபலமும் சிறுகதைகளின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தன.
- 18-ம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குருகதை தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி எனலாம்.
Related Links
Group 4 Model Questions – Download