சிறுபஞ்சமூலம்
நூற்குறிப்பு
- சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இதன் ஆசிரியர் காரியாசன்.
- கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல் நோயைத் தீர்ப்பன.
- அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்துகளும் மக்கள் மனநோயை போக்குவன. ஆகையால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.
பாவகை
- இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.
ஆசிரியர் குறிப்பு
- காரியாசன் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
- இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
- இவரும் கணிமேதாவியாகும் ஒரு சாலை மாணாக்கராவர்.
- பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
சிறந்த தொடர்கள்
- தனத்தால் போகம் தவத்தால் சுகம்சுகமா
ஞானத்தால் வீடாகும் நாட்டு
- தோற்கன்ற காட்டி கறவார் கறந்தபால்
பாற்பட்டா ருண்ணார் பழிபாவம்
- மான மழிந்த பின் வாழாமை முன்னினிது
- “பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு”
மேற்கோள்
குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து சிறுபஞ்சமூலம் 64 |