Tamilvidu Thoothu – தமிழ்விடு தூது பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

தமிழ்விடு தூது – Muthollayiram

TNPSC Tamil Notes - Tamilvidu Thoothu - தமிழ்விடு தூது

Group 4 Exams – Details

நூல் தமிழ்விடு தூது
பாவகை கலிவெண்பா
பாடல்களின் எண்ணிக்கை 268 கண்ணிகள்
பதிப்பு உ.வே.சா. (1930)

நூற்குறிப்பு

  • தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் “தூது” என்பதும் ஒன்று.
  • இது “வாயில் இலக்கியம்”, “சந்து இலக்கியம்” என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
  • “கலிவெண்பா”வால் இயற்றப்பட்டுள்ளது.
  • இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
  • 1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.
  • இதன் ஆசிரியர் பெயர் என்று அறிய முடியவில்லை
  • மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர்மேல் காதல் கொண்ட ஒரு பெண் தமிழைத் தூது அனுப்பி மாலை வாங்குவதாகப் பாடப்பட்ட நூல்
  • தமிழ்விடு தூது என்ற பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன
    1. ஆசிரியர் பெயர் தெரியா நூல்
    2. அமிர்தம் பிள்ளை எழுதிய தமிழ்விடு தூது
  • ஆசிரியர் பெயர் தெரியா நூல் புகழ் பெற்றது.

மேற்கோள்

“அரியாசனம் உனக்கே யானால் உனக்கு

சரியாரும் உண்டோ தமிழே”

 

தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான

முத்திக் கனியே என் முத்தமிழே – புத்திக்குள் உண்ணப்படும்

தேனே”

வயலின் வரப்பு  நால்வகைப் பாக்கள்
மடைகள் பாவினம்
ஏர்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
உழவர் புலவர்
விதைகள் வைதருப்பம், கெளடம், பாஞ்சாலம், மாகதம் என்ற செய்யுள் நெறிகள்
விளைபொருள் அறம், பொருள், இன்பம்
களைகள் போலிப்புலவர் கூட்டம்
களை எடுப்போர் வில்லிபுத்தூரார், ஒட்டக்கூத்தர், அதிவீரராம பாண்டியர் எனத் தமிழ் உருவகப்படுத்தப்பட்டு உள்ளது.

முத்தொள்ளாயிரம்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment