திரிகடுகம்
இம்மூன்றும் (அ) இம்மூவர் என வருவதே சிறப்பு
நூற்குறிப்பு
- திரிகடுகம் பதினெண்கீழ்கணக்கு நூல்களள் ஒன்று
- இந்நூல் 100 வெண்பாக்களை உடையது.
- சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்கு பெயர் திரிகடுகம். இம்மருந்தை உண்ட மனிதர்களின் உடல் நோய் நீங்கும்.
- இதைப்போன்றே ஒவ்வொரு திரிகடுகப் பாடலிலும் இடம் பெற்றுள்ள மூன்று கருத்துகளும் மக்களின் மனமயக்கத்தை போக்கித் தெளிவை அளிக்கும்.
ஆசிரியர் குறிப்பு
- திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்
- திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்.
- இவரை செருஅடுதோள் நல்லாதான் எனப் பாயிரம் குறிப்பிடுவதால், இவர் போர்வீரனாய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
- சமயம் – வைணவம்.
நூல் பயன்
- திரிகடுகம் பாடலிலுள்ள மூன்று அறக்கருத்துகள் கற்பாேரின் மனத்திலுள்ள அறியாமையை நோயை போக்கி, அவரைக் குன்றின்மேலிட்ட விளக்காக சமுதாயத்தில் திகழச் செய்யும்.
பாவகை
- 100 வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூலாகும்.
சிறந்த தொடர்கள்
- நல்லவை செய்வாள் பெய்யெனப் பெய்யும் மழை
- மக்கட் பெறலின் மனைக் கிழத்தி
- பெண்ணிற்கு அணிகலன் நாணுடைமை
- நெஞ்சம்அடங்குதல் வீடாகும்
- தோள்பற்றிச் சாயினும் சான்றாண்ம குன்றாமை