திருஞானசம்பந்தர் – Thirunavukkarasar
Group 4 Exams – Details
பெற்றோர் | சிவபாத இருதயர் – பகவதியார் |
சிறப்பு பெயர் | ஆளுடையபிள்ளை, காழிவள்ளல், திராவிடத் சிசு |
பாடல்களின் எண்ணிக்கை | 1600 பதிகங்கள் |
- சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர்.
- சீர்காழியிலே அந்தணர் மரபில் சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் மகவாய்த் தோன்றினார்.
- இவர் “ஆளுடையபிள்ளை” என்றும் “காழிவள்ளல்” என்றும் அழைக்கப் பெறுவர்.
- இளம் வயதிலேயே இறைவன் அருள் பெற்று நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தரானார்.
- தமிழ்நாட்டின் பல தலங்களுக்கும் சென்ற இவர் இறுதியில் திருப்பெருமண நல்லூரில் தன் பதினாறாவது வயதில் மணக்கோலத்துடன் இறைவனுடன் கலந்தார்
- சைவ சமயம் இந்நாட்டில் மீண்டும் தழைக்கப் பாடுபட்டவர்
- “வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க” வந்த இவர் “வேத வேள்விளை நிந்தனை செய்துழல்பவர்களை” வாதில் வென்றார்
- பெரியபுராணம் “பிள்ளைபாதி; புராணம் பாதி” என்று இவருடைய வரலாற்றிற்கே சீரிய இடம் தருகிறது
- நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டினைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்குக் கொணர்ந்தார்.
- கூன்பாண்டியன் என்றழைக்கப்படும் அப்பாண்டியரின் மனைவி மங்கையர்கரசியாரும், அமைச்சர் குலச்சிறை யாரும் சிறந்த சிவபக்தர்கள். இந்நிகழ்ச்சியால் அரசியல் செல்வாக்குச் சைவ சமயத்திற்குக் கிட்டிற்று; சமயமும் வளர்ந்தது
- ஆதிசங்கரர் இவரைத் “திராவிடத் சிசு” என்பர்.
- “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” என்ற புகழந்தவர் சுந்தரர்
- “வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கத் தோன்றியவர்” என்று புழந்தவர் சேக்கிழார்
- 7 கோள்களைப் பற்றி பாடியவர்
- இவர் இயற்றிய 384 பதிகங்களில் இயற்கை வருணனையும் தத்துவக் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.
Related Links
Group 4 Model Questions – Download